உலக அமைதிக்கு சவால் விடுக்கும் உக்ரேன்-ரஷ்ய போர்

உலக அமைதிக்கு சவால் விடுக்கும் உக்ரேன்-ரஷ்ய போர்

1 mins read
73e4a392-d078-4c7b-aec7-9f75a5d819c7
-

கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் உக்­ரேன் மீது ராணு­வத் தாக்­கு­த­லைத் ர‌ஷ்யா தொடங்­கி­யது. ரஷ்யா தனது படை­யெ­டுப்­புக்கு நேட்டோ நாடு­க­ளின் விரி­வாக்­கம், உக்­ரேன் நாடு அங்கு இருக்­கும் ரஷ்ய மொழி பேசும் மக்­க­ளுக்கு எதி­ராக மேற்கொண்டு உள்ள இனப் பேர­ழிவு நட­வ­டிக்­கை­கள் உள்­ளிட்ட பல கார­ணங்­க­ளைக் கூறி­யது. உயிர்ச்­சே­தம், வாழ்­வா­தா­ரப் பாதிப்பு, பொரு­ளி­யல் சீர்­கு­லைவு, மக்­கள் நாட்டைவிட்டு வெளி­யே­றும் அவ­ல­நிலை என உக்­ரேன் மக்­கள் துய­ருற்று வரு­கின்­ற­னர். மேலும் உலக அள­வில் இப்­போர் கார­ண­மாக பண­வீக்­கம் அதி­க­ரிப்பு, வர்த்­த­கச் செல­வு­கள் உயர்வு, விநி­யோ­கத் தொடர் இடை­யூ­று­கள், உண­வுத் தட்­டுப்­பாடு போன்ற பல்­வேறு இன்­னல்­கள் உரு­வெ­டுத்­தன. குறிப்­பாக, உல­கில் ஏற்­று­ம­தி­யா­கும் கோது­மை­யில் 29% ர‌ஷ்யா, உக்­ரேன் நாடு­க­ளி­லி­ருந்து வரும் சூழ­லில் இப்­போ­ரி­னால் கோது­மைக்கு கடும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டது. இப்­போர் குறித்து, அனைத்­து­லக அள­வில் எந்­த­வொரு நாட்­டின் அர­சுரிமை­யும் அர­சி­யல் சுதந்­தி­ரமும் வட்­டார ஒருங் கிணைப்பும் மதிக்­கப்­பட வேண்­டும் என்ற தனது நிலைப்­பாட்டை சிங்­கப்­பூர் உறு­தி­செய்­தது.