வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சீனப் புத்தாண்டு குதூகலம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சீனப் புத்தாண்டு குதூகலம்

2 mins read

சீனப் புத்­தாண்டு விடு­மு­றையை நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து கொண்­டா­டும் பழக்­கத்­தைத் தம் தந்­தை­யி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்­டார் 26 வயது மதி தன­பா­லன். அப்பா சிங்­கப்­பூ­ரில் ஊழி­ய­ராக வேலை செய்­த­போது சீனப் புத்­தாண்டு விடு­மு­றைக் காலத்­தில் திறந்­த­வெ­ளி­யில் நண்­பர்­க­ளு­டன் உணவு சாப்­பி­டு­வ­தோடு இறை­வனை வணங்கி பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­களை விளை­யா­டி­யும் வந்­தார்.

மதி அதே பழக்­கத்­தைக் கடைப்­பி­டித்து சீனப் புத்­தாண்­டின் ஒவ்­வொ­ரு­நா­ளன்­றும் தம் நண்­பர்­க­ளு­டன் புதிய நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டு­வார். சிங்­கப்­பூ­ரில் உள்ள பல இடங்­க­ளை­யும் நண்­பர்­க­ளோடு சுற்­றிப்­பார்ப்­பார். பாது­காப்பு ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் இவர், ஈராண்­டு­க­ளுக்­குப் பின் லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள திட­லில் நண்­பர்­க­ளு­டன் கப­டிப் போட்­டி­யில் விளை­யாட ஆர்­வத்­தோடு உள்­ளார்.

சிங்­கப்­பூ­ருக்கு வந்து ஆறு மாதங்­கள் மட்­டுமே ஆகி­யுள்ள நிலை­யில் 23 வயது அஜித்.டி இந்த நான்கு நாள் பொது விடு­மு­றையை எவ்­வாறு கழிப்­ப­தென்று யோசித்­தார். சிங்­கப்­பூ­ரில் சந்­தித்த நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து இந்­திய உண­வைச் சாப்­பிட்டு கபடி விளை­யா­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"கன்­னி­யா­கு­ம­ரி­யில் கப­டிக் குழு­வில் திற­மை­யான கபடி விளை­யாட்டு வீர­ராக இருந்­தேன். குடும்­பத்தை விட்­டுப் பிரிந்த எனக்கு, மறு­ப­டி­யும் கபடி விளை­யா­டும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரைச் சுற்­றிப் பார்க்க இந்த பொது விடு­முறை வாய்ப்­ப­ளித்து உள்­ளது," என்று கட்­டு­மா­னத் துறை­யில் பணி புரி­யும் அஜித் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆறு மாதங்­க­ளாக மருத்­துவ விடுப்­பில் இருந்த 30 வயது வேலு பால­மு­ரு­கன், இந்த சீனப் புத்­தாண்­டைத் தமது தங்கு­வி­டு­தி­யில் கொண்­டா­டு­கிறார்.

"இதற்கு முன், நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து வெளிப்­பு­றத்­தில் விளை­யாட்­டு­கள் விளை­யாடி, ஒன்­றாகச் சாப்­பி­டு­வோம். ஆனால் இந்த ஆண்டு, உடல் நல­மில்­லாத என்­னால் இந்த நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்க முடி­ய­வில்லை என்று வருந்­து­கி­றேன். இந்­தப் பொது விடு­முறைக்கு என் நண்­பர்­கள் சுவை­யான உண­வோடு என்­னைப் பார்க்க வரு­வார்­கள்," என்­றும் வேலு கூறி­னார்.

'வெல்­டர்' வேலை பார்க்­கும் இவர், வெளியே போக முடி­யா­விட்­டா­லும் நண்­பர்­க­ளு­டன் தங்கு­வி­டு­தி­யில் ஓய்­வு­பெற்று, உணவு உண்டு திரைப்­ப­டங்­களைப் பார்க்க ஆர்­வ­மாக இருக்­கி­றார்.

பொது விடு­முறை என்­றா­லும் தமக்கு வேலை உள்­ளது என்று எரி­வாயு உருளை விநி­யோக நிறு­வ­னத்­தின் ஓட்­டு­நர் எம் சந்­தி­ர­மூர்த்தி குறிப்­பிட்­டார்.

"வீடு­க­ளுக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் எரி­வாயு உருளை எந்­நே­ர­மும் தேவை. மிகக் கவ­ன­மாக எரி­வா­யு­வைக் கொண்டு செல்­வது என் பொறுப்பு. இத­னால் பொது விடு­மு­றை­யில் வேலை செய்­வது எனக்கு புதி­தல்ல," என்­­றார் சந்­தி­ர­மூர்த்தி.

வெஸ்ட் லைட் தங்­கு­வி­டு­தி­யில் இருக்­கும் இவர், விடு­தி­யில் மனி­த­வள அமைச்சு நடத்­தும் சீனப் புத்­தாண்டு நிகழ்ச்­சி­களில் பங்­கேற்க அதிக ஆர்­வம் கொண்­டுள்­ளார். இந்த நிகழ்ச்­சி­கள் மூலம் மற்ற இனங்­க­ளைப் பற்றித் தெரிந்­து­கொள்­வ­து­டன் சிங்­கப்­பூ­ரில் பல இனக் கலா­சா­ரம் சார்ந்த வாழ்க்­கை­மு­றை­யில் வாழத் தாம் கற்­றுக்­கொள்­வ­தா­க­வும் கூறி­னார் சந்­தி­ர­மூர்த்தி.