அனைத்து இன விழாக்களையும் அரவணைக்கும் குடும்பம்

அனைத்து இன விழாக்களையும் அரவணைக்கும் குடும்பம்

2 mins read
eb5b997c-93cd-4834-b04c-39f82a319699
-

பல்­லின சமு­தா­யம் கொண்ட சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வோர் இனமும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றன.

இருப்­பி­னும், சீனப் புத்­தாண்டை 38 வயது திரு­மதி உமா தேவி, ஒரு குறிப்­பிட்ட இனம் சார்ந்த கொண்­டாட்­ட­மா­கக் கரு­தா­மல் அதைத் தம் குடும்­பத்­து­டன் குதூ­க­ல­மா­கக் கொண்­டாடி வரு­கி­றார். இவ­ரின் கண­வர் மஹேந்­தி­ரன், 44, சீனப் புத்­தாண்­டுக்­கான எல்லா ஏற்­பாடு­க­ளை­யும் மும்­மு­ர­மா­கச் செய்து வரு­கி­றார்.

திரு­மதி உமா­வின் பிள்­ளை­களான ஒன்­பது வயது கவி­னேஷ், ஏழு வயது காவியா ஆகிய இரு­வ­ரும் சீனப் புத்­தாண்­டுப் பாடல்­களை­யும் நட­னங்­க­ளை­யும் கற்­றுக்­கொண்டு தங்­கள் குடும்­பத்­தா­ருக்­குச் சீன மொழி­யில் வாழ்த்துக் கூறச் சொல்­லிக்­கொ­டுத்­தார்­கள்.

சீனப் புத்­தாண்டு உட்­பட மக்­க­ளால் கொண்­டா­டப்­படும் அனைத்து விழாக்­க­ளை­யும் பொது விடு­மு­றை­க­ளை­யும் பிரம்­மாண்­ட­மாக, புதிய முறை­யில் கொண்­டாட திரு­மதி உமா விரும்புகி­றார்.

இந்த ஆண்டு தங்­க­ளின் புதிய வீட்­டில் புத்தாண்டு கொண்­டா­டும் இவர்­கள், உற்­றார் உற­வி­னர்­க­ளுக்கு 'ஸ்டீம்­போட்' விருந்துக்கு ஏற்­பாடு செய்து உள்ளனர்.

சீனப் புத்­தாண்டு தொடர்­பான உண­வுப் பண்­டங்­கள், பல­கா­ரங்­கள், பானங்­கள் ஆகி­ய­வற்­று­டன் திரு­மதி உமா தம் பிள்­ளை­க­ளு­டன் செய்த காகித, 'ஹாங்­பாவ்' அலங்­கா­ரங்­க­ளால் வீடு அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், ஆண்­டு­தோ­றும் நால்­வ­ரும் ஒரே நிறத்­தில் ஆடை­களை அணிய சில மாதங்­க­ளுக்கு முன்­பா­கவே திட்­ட­மி­டத் தொடங்­கி­வி­டு­வார்­கள்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக இவர்­க­ளின் வீட்­டில் சிங்க நட­ன­மும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இருப்­பி­னும், இந்த ஆண்டு புது வீட்­டில் குடி­யே­றிய பர­ப­ரப்­பில், முன்­கூட்­டியே சிங்க நட­னக் குழு­வுக்கு அழைப்பு விடுத்து ஏற்­பாடு செய்­யத் தாம் தவ­றி­விட்­டதை நினைத்து வருந்­து­கி­றார் திரு­மதி உமா.

"விருந்­துக்­குப் பின், நாங்­கள் போட்டி அங்­கம் நடத்­து­வோம். சீனப் புத்தாண்டு தொடர்­பான இந்­தக் கேள்­வி­க­ளுக்கு சரி­யா­கப் பதி­ல­ளிக்­கும் பிள்­ளைக்­குப் பரி­சு­கள் வழங்­கு­வோம்," என்­றார் திரு­மதி உமா. இந்த ஆண்டு முயல் ஆண்டு என்­ப­தால் முயல் பொம்­மை­க­ளைப் பரி­சாக வாங்­கி­யுள்­ளார்.

"பல இன சமு­தா­யத்­தில், மற்ற இனத்­த­வர்­க­ளு­டன் சேர்ந்து கொண்­டாட நினைப்­பதே சிறந்­தது. பெற்­றோ­ராக நான் என் குழந்­தை­க­ளுக்கு என் செயல்­கள் மூலம் ஒற்­று­மை­யு­ணர்­வைக் காட்­டு­வது முக்­கி­யம். பின்­னா­ளில் அவர்­களும் அதைப் பின்­பற்­று­வார்­கள்," என்று மன­நல ஆலோ­ச­க­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு­மதி உமா கூறி­னார்.

தாயா­ரின் இந்த ஆர்­வத்தை உணர்ந்து அவ­ரின் பிள்­ளை­களும் ஒவ்­வோர் ஆண்­டில் கொண்­டா­டப்­படும் விழாக்­க­ளைக் குடும்­பத்­தோடு கொண்­டாட ஆர்­வத்­து­டன் எதிர்­பார்க்­கி­றார்­கள்.