உலக அளவில் பொருளியல் மந்தநிலை ஏற்படும் என நிபுணர்கள் முன்னுரைத்து இருக்கும் நிலையில், சிங்கப்பூரின் வரவு செலவுத் திட்ட அறிக்கையை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அடுத்த மாதம் 14ஆம் தேதி நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். நிச்சயமற்ற உலகப் பொருளியல் சூழலில், நமது வரவு செலவுத் திட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து மக்களும் வணிகர்களும் அக்கறையுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். இதன் தொடர்பில் தமிழ்முரசிடம் சிலர் தங்களது எதிர்பார்ப்புகளைக் கூறினர்.
வரவுசெலவுத் திட்டம் மீதான எதிர்பார்ப்புகள்
1 mins read

