உள்ளூர் திறனாளிகளுக்கு
வேலை கொடுப்பதில் உதவிக்கரம்
சிறிய-நடுத்தர நிறுவனம் ஒன்றின் வர்த்தக நிர்வாகியான
திரு இப்ராஹிம், 28, உள்ளூர்வாசிகளை வேலையில் அமர்த்த அரசாங்கம் கூடுதல் ஆதரவு வழங்கலாம் என்று கூறினார். படிப்படியான சம்பள உயர்வு ஆதரவுத் திட்டங்கள், பணியிடைக்கால வாழ்க்கைத் தொழில் மாற்ற ஆதரவுத் திட்டங்கள் போன்றவற்றை அரசாங்கம் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் தெரிவித்தார். மேலும், சிறிய நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடி வழங்கலாம் என்றும் இது மொத்த செலவினத்தையும் குறைக்க உதவும் என்றும் திரு இப்ராஹிம் கூறினார்.
சிறிய நிறுவனங்களுக்கு
கூடுதல் ஆதரவு
சிறிய நடுத்தர நிறுவனங்களை மின்னிலக்கமயமாக்க அரசாங்கம் ஊக்குவித்துவரும் நிலையில் கடன் அட்டை, கடன்பற்று அட்டை போன்றவற்றின் பயன்பாட்டால் ஏற்படும் கட்டணங்கள் பெரிய தடங்கலாக இருப்பதாகக் குறிப்பிட்டார் தொழில்முனைவர் திரு ஈஸ்வரன் பழனிசாமி, 51 (படம்).
இந்தக் கட்டணங்கள் ஐரோப்பாவில் 2 விழுக்காடாக இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் 3.5 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடு வரை வசூலிக்கப்படுகிறது என்று கூறினார் இவர்.
விசா, மாஸ்டர்கார்ட், நெட்ஸ் போன்ற மின்னிலக்கக் கட்டண நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுக்குச் சலுகை தள்ளுபடிகள் வழங்கி 2% மட்டுமே வசூலிக் கின்றன. காரணம், அவற்றின் வசூலில் அதிக லாபம் கிடைக்கும். ஆனால் சிறிய அளவில் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதிகமான கட்டணத்தைச் செலுத்து கின்றன. இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதா அல்லது தாங்களே செலுத்துவதா என்ற கேள்வியும் எழுகிறது.
வாடிக்கையாளர்களிடம் வசூலித்தால் அவர்கள் இயல்பாகவே வசூலிக்காத பெரிய நிறுவனங்களிடம் பொருள்கள் வாங்கச் சென்றுவிடுவார்கள்.
வங்கிகளும் மின்னிலக்கக் கட்டண நிறுவனங்களும் வசூலிக்கும் பரிவர்த்தனைக் கட்டணங்களைச் சமாளிக்க, சிறிய நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கலாம் என்பது தனது எதிர்பார்ப்பு என்றார் திரு ஈஸ்வரன்.
அதிகரிக்கும் விலைவாசி என்பது அனைவரும் அறிந்திருந்தாலும் சிங்கப்பூரர்கள் எந்த அளவிற்கு இதைச் சமாளிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே என்றார் வர்த்தக ஆலோசகர் திருமதி தீபா சுப்பையா, 38 (படம்).
விலைவாசி குறித்த அதிருப்தி பற்றி தம்மிடம் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அதிகம் கவலை தெரிவிப்பதாக அவர் சொன்னார். உயரும் விலைவாசி, பொருள் சேவை வரி அதிகரிப்பு, பொதுப் போக்குவரத்து கட்டண அதிகரிப்பு, வாகன உரிமைச் சான்றிதழ் கட்டண அதிகரிப்பு போன்ற பலதரப்பட்ட அம்சங்களை சிங்கப்பூரர்கள் சமாளிக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் வழங்கும் பற்றுச்சீட்டுகளும் நிதியுதவித் திட்டங்களும் தற்காலிக நிவாரணம் மட்டுமே அளிப்பதாக அவர் கூறினார். நீடித்த காலத்திற்கு சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் தேவை என்றார் திருமதி தீபா.
படிப்படியான சம்பள உயர்வு முறை போன்ற திட்டங்கள், நிறுவனங்களுக்கு உதவக்கூடியவை என்று அறிவிக்கப்பட்டாலும் நிறுவனங்கள் இத்திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை அரசாங்கம் எவ்வாறு உறுதிசெய்கிறது என்பது இவரது கேள்வி.
காரணம், மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை யில் பெரிய மாற்றம் எதையும் உணரவில்லை என்றார். உயரும் விலைவாசி, நம் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவதற்குக் காரணமாகி விடுகிறது என்பதைச் சுட்டிய திருமதி தீபா, தாம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னரும் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கும் என்று கூறினார். தாம் அறிந்த சிலர், உயரும் விலைவாசியால் குழந்தை பெறுவதைத் தவிர்க்கவும் முடிவெடுத்தாக அவர் கூறினார்.
சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் திருமதி தீபா, அவை எதிர்நோக்கும் சிக்கல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய நடுத்தர தொழில்களுக்கென அரசாங்கம் வழங்கிவரும் ஆதரவு, வளமும் வசதியும் பெற்ற நிறுவனங்களுக்கே உதவுகின்றன என்றார்.
மின்னிலக்கமயமாகவும் வெளிநாடுகளுக்குச் செல்லவும் நிறுவனங்கள் முதலில் தாங்களே நிதிகளை வியாபாரத்தில் செலுத்த வேண்டியுள்ளதால் ஒருசில சிறிய நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதில்லை என்கிறார் திருமதி தீபா.
அத்துடன் கொவிட்-19 காலத்தில் பயணத்துறை, உணவு பானத் துறை, சில்லறை வர்த்தகத் துறை போன்றவற்றைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு ஆதரவு அதிகம் வழங்கப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வித்துறை, சிறிய கணக்கியல் நிறுவனங்கள், ஆலோசனை சேவை வழங்கும் நிறுவனங்கள், கடல்சார் வர்த்தக நிறுவனங்கள், கட்டுமானத் துறை நிறுவனங்கள் போன்றவற்றுக்குப் போதிய ஆதரவு வழங்கப்படவில்லை என்றும் இதனால் குறிப்பிட்ட இந்த நிறுவனங்கள் தாங்கள் ஒதுக்கப்பட்டதுபோல் உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு கருதிய பல நிறுவனங்கள், கொவிட்-19 காலத்தில் தங்கள் வர்த்தகச் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சிலர் வியாபாரத்தை மூடிவிடும் நிலைக்குக்கூட தள்ளப்பட்டனர். வங்கிகளும் இவர்களுக்குக் கடன் வழங்க முன்வரவில்லை என்றார் திருமதி தீபா.
ஆகையால், இவ்வாண்டு சிறிய நடுத்தர நிறுவனங்களுக்குப் பாரபட்சம் இன்றி நிதி ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பது இவரது விருப்பமாகும். உதவி தேவைப்படும் நிறுவனங்களை, அரசாங்கம் அறிமுகப்படுத்தும் ஆதரவுத் திட்டங்கள் சென்றடைகின்றனவா என்பதையும் அரசாங்க அமைப்புகள் கண்காணிப்பதோடு சிறிய நிறு
வனங்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்யலாம் என்றார் திருமதி தீபா.

