அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவி வழங்க முனைந்திருந்தாலும் ஆதரவுத் திட்டங்களுக்கான தகுதி நிபந்தனைகளை சிறிய நிறு
வனங்கள் பூர்த்தி செய்ய முடி
வதில்லை என்பது 'ஃபோகஸ் அட்வென்சர்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சசிகுமார் தனபதியின் (படம்) கருத்து. மின்னிலக்கமயமாவதில் ஏற்படும் சிக்கல்களைக் குறிப்பிட்டுச் சொன்னார் திரு சசிகுமார்.
உதாரணத்திற்கு, தமது வளங்களைத் திட்டமிடும் செயல்பாடுகளை இணையத்
தளத்திற்கு மாற்ற விரும்பும் இவர், அதற்கு 200 அங்குதொடுதிரை தேவைப்படுகிறது என்றார்.
இதற்கு $80,000 செலவாகும். அரசாங்க நிதியுதவியால் இந்தச் செலவைச் சமாளிக்க முடியாது. காரணம், மென்பொருள் செலவுகளுக்கு மட்டுமே அரசாங்க நிதியுதவியைப் பயன்படுத்த முடியும்; ஹார்ட்வேர் எனப்படும் வன்பொருள்களுக்கு அல்ல.
அரசாங்க ஆதரவுத் திட்டங்களில் பலவற்றைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களின் பணத்தை முதலில் செலுத்திய பின்னரே அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.
பெரிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சிறிய நிறுவனங்களிடம் பணம் அதிகம் இருப்பதில்லை என்பதால் இந்த அணுகுமுறையை அரசாங்கம் மாற்ற வேண்டும் என்று இவர் எதிர்பார்க்கிறார். நிதியுதவியை முதலில் வழங்கக்கூடிய வகையில் திட்டங்களை மாற்றிஅமைக்கலாம் என்பது திரு சசிகுமாரின் கருத்து.

