பெரிய குடும்பங்களுக்கான கவனிப்பு

பெரிய குடும்பங்களுக்கான கவனிப்பு

1 mins read

திரு­மதி ரேணுகா அறி­வ­ழ­கன் (படம்) வீட்­டில் அவ­ரு­டைய கண­வர், மூன்று பிள்­ளை­கள், சித்தி என மொத்­தம் அறு­வர் உள்­ள­னர். திரு­மதி ரேணு­கா­வும் அவ­ரின் கண­வ­ரும் மருத்­து­வத் துறை­யில் பணி­பு­ரி­கின்­ற­னர்.

அர­சாங்­கம் வழங்­கும் நிதி­உ­த­வி­கள் செல­வி­னத்­தைக் குறைக்க உத­வி­னா­லும் அவை தற்­கா­லிக உத­வி­யாக இருக்­கின்­றன என்ற கருத்தை இவ­ரும் முன்­வைத்தார்.

உதா­ர­ணத்­திற்கு, பெரிய குடும்­பங்­க­ளுக்கு ஒரு வாரப் பயன்­பாட்­டுக்கு மட்­டுமே 'சிடிசி' பற்­றுச்­சீட்­டு­கள் உத­வி­யாக இருக்­கின்­றன என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தின் கல்வி சார்ந்த ஆத­ரவை அவ­ரின் பிள்­ளை­கள் பெற்று வரு­வ­தால் குடும்­பச் செலவுகளைக் கட்­டுப்பாட்­டுக் குள் வைத்திருப்பதாக அவர் கூறினார். ஆனால், இதைத் தவிர்த்து பிள்­ளை­க­ளின் மருத்­து­வச் செல­வு­கள் போன்ற மற்ற செலவுகள் இருப்பதை இவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்­டின் வரவு செல­வுத் திட்ட அறி­விப்­பு­கள் பெரிய குடும்­பங்­க­ளுக்கு உத­வும் வகை­யில் அமைய வேண்­டும் என்­பது இவ­ரது எதிர்­பார்ப்­பா­கும். சிறப்­புத் தேவை, அல்­லது கூடு­தல் தேவை­க­ளு­டைய குழந்­தை

­க­ளைக்கொண்ட குடும்­பங்­

க­ளுக்கான அர­சாங்­க ஆதரவு­அதிகரிக்கப்பட வேண்­டும் என்று விரும்­பு­கி­றார் இவர்.