திருமதி ரேணுகா அறிவழகன் (படம்) வீட்டில் அவருடைய கணவர், மூன்று பிள்ளைகள், சித்தி என மொத்தம் அறுவர் உள்ளனர். திருமதி ரேணுகாவும் அவரின் கணவரும் மருத்துவத் துறையில் பணிபுரிகின்றனர்.
அரசாங்கம் வழங்கும் நிதிஉதவிகள் செலவினத்தைக் குறைக்க உதவினாலும் அவை தற்காலிக உதவியாக இருக்கின்றன என்ற கருத்தை இவரும் முன்வைத்தார்.
உதாரணத்திற்கு, பெரிய குடும்பங்களுக்கு ஒரு வாரப் பயன்பாட்டுக்கு மட்டுமே 'சிடிசி' பற்றுச்சீட்டுகள் உதவியாக இருக்கின்றன என்றார் அவர்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் கல்வி சார்ந்த ஆதரவை அவரின் பிள்ளைகள் பெற்று வருவதால் குடும்பச் செலவுகளைக் கட்டுப்பாட்டுக் குள் வைத்திருப்பதாக அவர் கூறினார். ஆனால், இதைத் தவிர்த்து பிள்ளைகளின் மருத்துவச் செலவுகள் போன்ற மற்ற செலவுகள் இருப்பதை இவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்ட அறிவிப்புகள் பெரிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என்பது இவரது எதிர்பார்ப்பாகும். சிறப்புத் தேவை, அல்லது கூடுதல் தேவைகளுடைய குழந்தை
களைக்கொண்ட குடும்பங்
களுக்கான அரசாங்க ஆதரவுஅதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் இவர்.

