அரசாங்கத்தின் 'குழந்தை போனஸ்' திட்டம், குழந்தை பிறப்பது முதல் மருத்துவச் செலவு களுக்கும் பள்ளிச் செலவுகளுக்கும் உதவுகின்றன என்றார், மூன்று வயது சிறுவனுக்குத் தாயாரான திருமதி ஆயிஷா, 26. ஆனால் குழந்தையின் வாழ்நாள் தேவை
களுக்கான செலவை, வேலை செய்யும் பெற்றோர் இருவராலும் கட்டுப்படுத்த இயலாமல் போகலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டார். இதனால் குழந்தை செலவுகளுக்கும் வீட்டுச் செலவுகளுக்கும் அரசாங்கத்தின் தொடர் ஆதரவு பெரிதும் உதவும் என்றார்.
மூவர் கொண்ட இவரின் குடும்பத்திற்கு 2 முதல் 3 மாதங்கள் வரை மளிகைப் பொருள்கள் வாங்க அரசாங்கம் வழங்கும் 'சிடிசி' பற்றுச்சீட்டுகள் உதவியாக இருப்பதாகக் கூறினார். ஆனால் மூன்று மாதத்திற்குப் பிறகு அதிகரித்திருக்கும் விலை
வாசியை தாங்களே சரிக்கட்டும் கட்டாயம் ஏற்படுகிறது என்றும் கூறினார்.
அரசாங்கம் வழங்கும் உதவித்தொகைகள் தற்காலிகத் தீர்வாக உள்ளது என்பது திருமதி ஆயிஷாவின் கருத்து. தொடர்ந்து குடும்பச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில் அரசாங்கம் உதவவேண்டும் என்பது இவரது எதிர்பார்ப்பாகும்.
அவ்வாறு உதவுவது செயல்படுத்த முடியாத ஒன்று என்ற நிலையில் அதிகரித்து
வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இவர் கருதுகிறார்.
குறிப்பாக, குழந்தைகளோடு முதியவர்
களையும் கொண்டுள்ள குடும்பங்களுக்கு கூடுதல் உதவி தேவைப்படுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற குடும்பங்களின் செலவினம் சராசரி குடும்பங்களைவிட அதிகமாகவே உள்ளது என்பது இதற்குக் காரணம் என்றார் திருமதி ஆயிஷா.

