வழிதேடி வந்தோருக்கு வழிகாட்டுகிறார் தடம்புரண்டவரின் புது வாழ்வு

வழிதேடி வந்தோருக்கு வழிகாட்டுகிறார் தடம்புரண்டவரின் புது வாழ்வு

3 mins read

போதை­ப்பொ­ருள் விற்­ப­னைக்­கா­க­வும் புழக்­கத்­திற்­கா­க­வும் இரண்­டா­வது முறை சிறை சென்­றி­ருந்த திரு ராமச்­சந்­தி­ரனை,­ சிறை­யின் நான்கு சுவர்­களுக்­கி­டையே வாடகை வீட்­டில் தனியே தவிக்கும் இளம் மனைவி, மூன்று பிள்­ளை­க­ளின் சித்­தி­ரம் சித்­தி­ர­வதை செய்­தது. கூடவே போதை கிடைக்­காத தவிப்பு. பைத்­தி­யம் பிடித்­து­வி­டும் மனநிலைக்குத் தள்ளப்பட்டார்.

மனப்­போ­ராட்­டத்­தின் ஒரு கணத்­தில் பித்து நிலை­யி­லி­ருந்து விடு­பட்டு, தவிக்­கும் குடும்­பத்­தைக் காப்­பாற்ற வேண்­டும் என்ற உறுதி அவ­ருக்­குள் உருப்­பெற்­றது.

"மீண்­டும் குடும்­பத்­தார் முகத்­தில் எப்படி விழிப்­பேன் என்ற கேள்வி அனு­தி­ன­மும் என்னை வாட்­டி­யது. சக சிறை­வாசி ஒரு­வர் 'பிரி­சன் ஃபெலோஷிப்' அமைப்­புக்கு எழு­தச் சொன்­னார். அவர்­க­ளின் ஆத­ரவு நான் மீண்டு வர பெரி­தும் கைகொ­டுத்­தது," என்­றார் 45 வயது திரு ராம்.

இர­வு­நேர கேளிக்­கைத் துறை­யில் உயர்­நி­லை­யில் பணி­பு­ரிந்­த­போது திரு ராம் குண்­டர் கும்­ப­லில் சேர்ந்­தார்.

2010ஆம் ஆண்டு முதல் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­க­ளி­டம் இருந்து தப்­பி­யோ­டத் தொடங்­கிய அவர் 2014ல் பிடி­பட்­டார். ஏறக்­கு­றைய ஆறாண்டு சிறை தண்­ட­னை­யும் ஐந்து பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

சிறை­யி­லி­ருந்து வெளி­வந்­த­போது, கையில் பத்து வெள்ளி மட்­டுமே வைத்­தி­ருந்த மனை­வி­யின் நிலை அவரை உருக வைத்­தது. சில மாதங்­க­ளி­லேயே ஓட்­டு­நர் உரி­மம் பெற்று, வாடகை உந்­து­வண்டி ஓட்­டு­ந­ராக பணி­பு­ரி­யத் தொடங்­கி­னார் திரு ராம்.

"முன்­னர் கையில் அவ்­வ­ளவு பணம் புரண்­டது. இப்­போது சம்­பா­திப்­பது மிகக் குறை­வு­தான். ஆனால், என்னை விட்­டுப்­போன சொந்­தங்­க­ளை­யும் அவர்­க­ளின் அன்­பை­யும் சம்­பா­தித்­து­விட்­டேன். அதுவே எனக்குப் போதும்," என்­றார் அவர்.

படிப்­ப­டி­யாக உயர எண்ணி மூன்­றாண்­டு­களில் கிளாஸ் 3, 4, 5 ஓட்­டு­நர் உரி­மங்­களை திரு ராம் பெற்­றார். தற்­போது எரி­பொ­ருள் வண்டி ஓட்­டு­நராக பணி­பு­ரி­யும் அவர், மென்­மே­லும் உயர்­வதற்­கான வழி­மு­றை­களை மேற்­கொண்டு வரு­கி­றார்.

"உங்­க­ளைப் போலவே நான் ஆக வேண்­டும் என்று என் பிள்­ளை­கள் கூறும்­போ­தெல்­லாம், என்­னைப்­போல் மட்­டும் ஆகி­வி­டா­தீர்­கள் என்று சொல்­வேன்," என்று கண்­க­லங்­கி­னார்.

சகா­ய­ராஜா தொடக்­க­நிலை ஒன்­றில் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென்று ஒரு­நாள் தந்தை வீட்­டை­விட்­டுச் சென்­று­விட, சாப்­பாட்­டுக்கே தவிக்­கும் நிலை. பள்­ளிக்­கட்­ட­ணம் செலுத்தமுடி­யாது இவ­ரும் இவ­ரு­டைய இரட்டை சகோ­த­ர­ரும் சகோ­த­ரி­யும் கல்­வி­யைக் கைவிட்­ட­னர். 11 வய­தில் புகை­ப் ப­ழக்­கம், 13 வய­தில் மது, 16ல் கானா­பிஸ், 17ல் ஹெரா­யின் என போதை உல­கத்­திற்­குள் தங்­களை இழந்­த­னர் இரட்­டை­யர்.

தேசிய சேவையின்போது சட்­டைப்­பைக்­குள் 0.2 கிராம் போதைப்­பொ­ருள் இருந்த குற்­றத்­திற்­காக 1998ல் 18 மாதம் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டார் திரு சகா­ய­ராஜா.

இவர்­க­ளு­டைய 16வது வய­தில் மறு­ம­ணம் முடித்த தாயா­ருக்கு இரு பெண் பிள்­ளை­கள் பிறந்­த­னர். மாற்­றாந்­தந்­தை­யின் வரு­மா­னத்­தில் குடும்­பம் வாழ்ந்து வந்த நிலை­யில், தங்­க­ளு­டைய வாழ்­வைச் சீர­ழித்துக்­கொண்­டி­ருந்த சகோ­தர்­களை தாயார் காவல் துறை­யி­டம் பிடித்­துக்­கொ­டுத்­தார். 23 வயதில் இரு­வ­ரும் ஓராண்டு சிறையிலும், ஓராண்டு கண்­கா­ணிப்புக் காவலிலும் இருந்­த­னர். அடுத்து வந்த ஆறு ஆண்டு­க­ளை­யும் போதைப்­பொ­ருள் குற்­றங்­க­ளுக்­காகச் சிறை­யி­லேயே கழித்­தார் சகா­ய­ராஜா.

பிறகு மறு­வாழ்வு நிலை­யம் சென்ற அவருக்கு செறி­வூட்­டல் வகுப்­பு­களும், மன­நல ஆலோ­ச­னை­களும் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தின. வாழ வேண்டும் என்ற உறுதியோடு அங்கிருந்து வெளியே வந்த சகா­ய­ரா­ஜா­வுக்கு 'தி ஹெல்­பிங் ஹாண்ட்' தொண்டு நிறு­வ­னம் வழி­காட்டி­யது.

கடந்த 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இத்­தொண்டு நிறு­வ­னம் வழி நூற்­றுக்­க­ணக்­கான முன்­னாள் கைதி­க­ளுக்கு உதவியுள்ளார். 2013ல் மணம் முடித்து, தற்­போது மன­நி­றை­வான வாழ்க்­கையை வாழ்­ந்து வரு­வ­தாகக் கூறி­னார் 52 வய­தா­கும் சகா­ய­ராஜா.

இவ­ரின் இரட்டை சகோ­த­ரர் தேவ­ச­கா­யம், போதைப்­பொ­ருள் மோகத்­தி­லி­ருந்து மீள பல ஆண்டு­கள் பிடித்­தன. தொடர்ந்து போதைப்­பொ­ருள் சார்ந்த குற்­றங்­களில் ஈடு­பட்டு 46வது வய­து­வ­ரை 12 ஆண்­டு­க­ளுக்­கும் மேல் சிறை­யி­லேயே கழித்­தார்.

சகோ­த­ர­ரின் அறி­வு­ரை­யி­னா­லும் உந்­து­த­லி­னா­லும் மனம்­தி­ருந்தி கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக மனை­வி, 18 வயது மக­ளுக்­கா­க வாழ்ந்து வரு­கி­றார்.

"எச்­சூ­ழ­லி­லும் சில தவ­று­களை ஒரு­மு­றை­கூட செய்­யக்­கூ­டாது. கட்­டுப்­பா­டு­களும் ஒழுக்­க­மும் நிறைந்த வாழ்வே மகிழ்ச்­சி­யா­னது," என்று இளைய­ த­லை­மு­றை­யி­ன­ருக்குக் கூறி­னர் இச்­ச­கோ­த­ரர்­கள்.