மறு­வாழ்வில் முத­லா­ளி­க­ளின் பங்கு

1 mins read

பண மோசடி தொடர்­பில் மூன்று முறை சிறைக்­குச் சென்­ற­வர் திரு அனில் டேவிட். தானா மேரா சிறைச்­சா­லை­யின் தொலைபேசி அழைப்பு மை­யத்­தில் வேலை­பார்க்­கும் வாய்ப்­பைப் பெற்­ற­போ­து­தான் கைதி­கள் கைகோத்து ஆக்­க­பூர்­வ­மா­கச் செயல்­பட முடி­யும் என்­பதை உணர்ந்­தார்.

அதில் அனி­லின் 'அகாபே' எனும் நிறு­வ­னம் 2012ல் உரு­வெ­டுத்­தது. மாற்­றுத் திற­னா­ளி­கள், முன்­னாள் கைதி­கள் ஆகி­யோ­ருக்கு வேலை­வாய்ப்­பு­களும் வாழ்க்­கைத்­தொ­ழில் வழி­காட்­டு­த­லும் அளித்­து­வ­ரு­கிறது இந்த நிறு­வ­னம்.

"முன்­னாள் கைதி­க­ளைக் குற்­றம் புரிந்­தோ­ராக மட்­டும் பார்த்த முத­லா­ளி­கள், நவீனமய உல­கில் அவர்­களை ஊழி­ய­ர­ணி­யின் ஓர் அங்­க­மா­கப் பார்க்­கத் தொடங்­கி­யுள்­ள­னர்," என்­றார் அவர்.

ஆனால், சுயதொழில் தொடங்­கா­தோர் பணித்­தேக்­கம் அடை­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் என்­ப­தை­யும் அனில் குறிப்­பிட்­டார். எனவே, முன்­னாள் கைதி­களும் திறன் மேம்­பாடு குறித்த விழிப்­பு­ணர்­வைக் கொண்­டி­ருப்­பது அவ­சி­யம் என்­றார் அனில்.