மகப்பேற்றுச் சடங்குகளை முன்னெடுப்பார்

மகப்பேற்றுச் சடங்குகளை முன்னெடுப்பார்

2 mins read
d7935a68-4c7c-4607-9a5d-ca3e523a0ca4
-

மகப்­பேறு காலத்தை முழு­மை­யாக்கு­கின்­றன தமி­ழ­ருக்கே உரிய பாரம்­ப­ரிய சடங்­கு­கள். வளை­காப்பு, பெரி­யாச்­சிப் படை­யல் முத­லிய சடங்­கு­களை முன்­னி­ருந்து நடத்தித் தருகி­றார், 60 வயது வான்­மதி சோமு. இரு­பது ஆண்டு ­க­ளா­கச் செய்­து­வந்த குழந்­தைப் பரா­ம­ரிப்­புத் தொழி­லிலி­ருந்து ஓய்வு­பெற நினைத்த இவர், இப்பணியை ஐந்­தாண்­டு­க­ளாக செய்துவ­ரு­கி­றார்.

அதில் தொடங்கி, கரு­வுற்ற பெண்­க­ளுக்­கான உடற்­பி­டிப்­பு மற்றும் பரா­ம­ரிப்­புச் சேவை­க­ளை­திரு­மதி வான்­மதி மூன்­றாண்­டு­ க­ளாக வழங்­கி­வ­ரு­கி­றார். புதிய தாய்­மா­ருக்கு மன ஆறு­தல் தருவதே இப்­ப­ணி­யின் ஆகச் சவா­லான, பொருள் பொதிந்த அம்­ச­மெ­னக் கூறி­னார் இவர்.

கரு­வுற்­ற­போது உட­லில் ஏற்­படும் மாற்­றங்­கள், இயல்­பா­கவே பெண்­களை மன­த­ள­வில் பாதிக்­கின்­றன. காலில் நீர் கோர்த்துக் கொண்டால் சொந்­த­மாக அமர்­ வ­தும் நிற்­ப­தும்­கூட சிர­ம­மா­கி­விடும். "அப்பிரச்­சி­னை­க­ளைப் போக்கி, அவர்­க­ளுக்கு மீண்­டும் நம்­பிக்கை தரு­வது அவ­சி­யம்," என்­றார் திரு­மதி வான்­மதி.

கம்­பத்­தில் வளர்ந்த திரு­மதி வான்­மதி, தாம் பிள்­ளை­பெற்­ற­போது பல இன அண்­டை­வீட்­டார் அளித்த அறி­வு­ரை­க­ளைக் கொண்டு தமக்­கென்று புதிய முறை­களை உரு­வாக்­கி­யுள்­ளார்.

தற்­போது சிசுக்­க­ளுக்கு மஞ்­சள் காமாலை அதி­கம் ஏற்­ப­டு ­வ­தை­யும் அறுவை சிகிச்­சை­வழி பிள்­ளைப்­பேறு அதி­க­மாக உள்­ள­தை­யும் கவ­னித்­த­ அவர், அடி வயிற்று ரணங்­களை ஆற்று வதற்­கும் மஞ்­சள் காமா­லை­யைப் போக்­கு­வ­தற்­குமான சிகிச்சை முறை­க­ளைத் தேடி­னார்.

பாரம்­ப­ரிய சீன மருத்­து­வத்­தில் பயன்­படும் 'மெய் குவை ஹுவா' பூக்­க­ளுக்­கும் தமி­ழ­ரின் பன்­னீர் ரோஜாக்­க­ளுக்­கும் உள்ள மருத்­துவ குணங்­களை அறிந்­து­கொண்ட இவர், அவற்­றால் சிசுக்களைக் குளிப்­பாட்­டு­வது மஞ்­சள் காமா­லைக்கு நல்ல பலன் தரு­வ­தாகச் சொன்னார்.

பொமெல்லோ இலை­கள் முத­லிய மூலி­கை­களை உள்­ளூ­ரி­லும் இந்­தி­யா­வி­லி­ருந்­தும் சேக­ரித்து குளி­யல் பொடி செய்­வ­தும் இவ­ரது தனித்­து­வங்­களில் ஒன்று.