பிள்ளை பிறந்த பிறகு தாய்மாரின் இயங்குநீர் எனப்படும் ஹார்மோன் மாற்றங்களால் மன உளைச்சலுக்கும் கவலைக்கும் ஆளாவது வழக்கம். இச்சிக்கல், முதல் சில வாரங்களுக்கு நீடிக்கும். அதையும் தாண்டி, மாதக் கணக்கில் நீடிக்கும் சோர்வும் சோகமும் 'போஸ்ட்பார்டம் டிப்ரெஷன்' எனும் மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். இச்சிக்கல் உலகளவில் ஐந்தில் ஒரு தாயாருக்கு ஏற் படுகிறது.
இந்நிலை உள்ளதா என்பதைக் கண்டறிய, https://www.alliance counselling.com.sg/perinatal-questionnaire/ எனும் தளத்தைத் தாய்மார் நாடலாம்.
புதிய தாய்மாரின் குடும்பத்தாரும் நண்பர்களும் பலவிதமான கருத்துகளை முன்வைக்கலாம். அவர்களின் மாறுபட்ட கருத்துகள் பலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
புதிய பொறுப்பை ஏற்றுள்ள தாய்மார் தனித்துவிடப்பட்டதைப் போன்று உணர்வதால், அவர் களுக்கு ஆதரவுக்குழுக்களும், மகப்பேறுகால உதவிப்பெண்களும் பெரிதும் கைக்கொடுக்க வல்லவர்கள். அலயன்ஸ் கவுன்சலிங் ஆலோசனை நிறுவனத்தின் 'மைண்ட்ஃபுல் மம்ஸ்' எனும் இலவச ஆதரவுக்குழு, புதுத் தாய்மாருக்கு உதவுகிறது.
தேவையான அளவில் பால் சுரக்காவிடில் தாய்மார் மன இறுக்கத்துக்கு ஆளாகக்கூடும்.
இதைக் களைய, பாலூட்டல் ஆலோசகர்கள், தாதியர் உட்பட்டோர் பிரசவம் முடிந்த கையோடு புதுத் தாய்மாருக்கு வகுப்புகளை நடத்துவர்.
தகவல்: மகப்பேறுகால உளவியலாளர் அஷ்வினி மனாசே, மகப்பேறு மருத்துவர் டாக்டர் வனஜா கலைச்செல்வன்

