தமிழர் சிறப்பு கூறும் தொன்மையான நாணயங்கள்

தமிழர் சிறப்பு கூறும் தொன்மையான நாணயங்கள்

3 mins read
dc41535a-8403-4388-8df8-551a9ec5cbc3
-
multi-img1 of 2

வர­லா­று­போற்­றும் பழ­மை­யான இடங்­க­ளை­யும் தொன்­மை­யான கல்­வெட்­டு­க­ளை­யும் பார்த்து வளர்ந்த 38 வயது திரு ரஞ்­சித் தன­ராஜ், கடந்த 28 ஆண்டு களாக பழ­மை­யான நாண­யங் களைச் சேக­ரித்து வரு­கி­றார்.

தமிழ் வர­லாற்­றின் மீதான ஆர்­வம் இவ­ரது குடும்­பத்­தில் தலை­முறை தலை­மு­றை­யாக இருந்து­ வ­ரு­கிறது. 10 வய­தில் இவ­ருக்கு இந்த ஆர்­வம் தொற்­றி­யது. பள்­ளிப்பரு­வம் முதல் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இடங் களுக்­குச் சென்று நேரத்­தைச் செல­வி­டும் ரஞ்­சித், இன்­று­வரை அதே­போன்ற வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க நாண­யங்­க­ளு­டன் அஞ்சல்­ த­லை­க­ளை­யும் சேக­ரித்துவரு­கி­றார்.

தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் முது­க­லைப் பட்­டம் பெற்­ற ரஞ்சித், வர­லா­று­மீ­தான ஆர்­வத்­தால் அத்துறையில் முதுகலைப் பட்டமும் தொல்­லி­யல், கல்வெட்டுத் துறை­யில் டிப்ளோமா பட்­டயமும் பெற்­றுள்ளார். தக­வல் தொழில்­நுட்ப ஆலோ­ச­க­ரா­கப் பணி­பு­ரி­யும் இவர், சிங்­கப்­பூ­ரின் செங்­காங் வட்­டா­ரத்­தில் 15 ஆண்­டு­க­ளாக வசித்­து­வ­ரு­கி­றார். இங்­கும் அவர் பழ­மை­யான நாண­யங்­ க­ளைச் சேக­ரித்­து­வ­ரு­கி­றார்.

இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து, ஹாங்­காங், மலே­சியா போன்ற நாடு­களில் நடை­பெ­றும் அனைத்­து­லக நாண­யக் கண்­காட்­சி­களில் பங்­கு­பெற்று சில நாண­யங்­களை அங்கு வாங்­கி­யும் உள்­ளார். பழ­மை­யான பொருள்­கள் சேக­ரிக்­கும் மற்­ற­வர்­க­ளு­டன் பழக இத்­த­ளங்­கள் வாய்ப்­ப­ளிப்­ப­தா­கக் குறிப்­பிட்ட ரஞ்­சித், மற்­ற­வர்­க­ளி­டம் உள்ள பொருள்­கள் பிடித்­திருந்தால் பணம் அல்­லது வேறு வர­லாற்று ஆவ­ணங்­க­ளைப் பரி­மா­றிக்­கொள்­வது வழக்­கம் என்­றார்.

ஒரு முறை எதிர்­பா­ராத வித­மாக ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடை­பெற்ற ஓர் ஏலத்­தில் 1,300 ஆண்­டுப் பழ­மை­வாய்ந்த ஒரு தமிழ் வர­லாற்று நாண­யம் கிட்­டி­ய­தாக ரஞ்­சித் குறிப்­பிட்­டார்.

தொன்­மை­யான மதுரை நக­ரில் பிறந்த ரஞ்­சித், கால­னித்­துவ ஆட்­சி­யின் கீழ் இந்­தி­யா­வில் வெளி­யி­டப்­பட்ட நாண­யங்­க­ளைச் சேக­ரிக்­கத் தொடங்­கி­னார். தற்­போது மதுரை வர­லாற்­றைச் சார்ந்த நாண­யங்­களில் அதிக கவ­னம் செலுத்­து­வ­தாக அவர் கூறி­னார்.

கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக மதுரை வர­லாறு குறித்து ஆராய்ச்சி செய்­தி­ருக்­கும் இவர், மதுரை வர­லாறு, நாண­ய­வி­யல் ஆகி­யவை குறித்த ஆங்­கில நூலை எழு­தி­வ­ரு­கி­றார். அதை இவ்­வாண்டு வெளி­யி­ட­வும் அவர் திட்­ட­மிட்­டுள்­ளார். தமி­ழி­லும் அத்தகைய நூலை வெளி­யி­டும் திட்­டம் உண்டு என்று ரஞ்­சித் சொன்­னார்.

சேக­ரித்த நாண­யங்­களை வெளி­நாடுகளுக்கு எடுத்­துச்­செல்­வது கடி­னம் என்­ப­தால் வருங்­கா­லத்­தில் அவற்றை அருங்­காட்­சி­ய­கத்­தில் காட்­சிக்கு வைக்க அல்­லது பழ­மை­யான பொருள்க­ளைச் சேக­ரிப்­ ப­வர்களி­டம் விற்க அவர் திட்­ட­மிட்­டுள்­ளார்.

சங்­க­கால நாண­யம்

தம்­மி­ட­முள்ள ஆகப் பழமை யான நாண­யம் சங்­க­கால பாண்­டி­யர் காலத்து வெள்ளி முத்­தி­ரைக் காசு என்­றார் ரஞ்­சித். அது கி.மு. 300 - கி.மு. 400 காலத்­தில் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­க­லாம் என்று இவர் நம்­பு­கி­றார்.

மேலும், கி.மு. 200 - 300வில் பயன்­ப­டுத்­தப்­பட்ட பாண்­டி­யன் பெரு­வ­ழுதி ஆட்­சி­கா­லக் காசும் தம்­மி­டம் உள்­ள­தாக அவர் கூறி­னார்.

உத்­தம சோழர், இரா­ஜ­ராஜ சோழர், இரா­ஜேந்­திர சோழர், விக்­ரம சோழர் போன்ற மன்­னர்­க­ளின் நாண­யங்­களும் தம்­மி­டம் உள்­ளன என்­றார் ரஞ்­சித். மதுரை சுல்­தான் ஜலா­லு­தீன் அஹ­சன் ஜித்­தல் காலத்தின் இரண்டு அரிய நாண­யங்­களும் நாயக்க மன்­னர்­க­ளின் நாண­யங்­களும் தம்­மி­டம் உள்­ளன என்­றும் குறிப்­பிட்­டார்.

"ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும் எத்­தனை வித­மான நாண­யங்­கள் இருந்­தன என்­ப­தற்­கான திட்­ட­வட்­ட­மான குறிப்­பு­கள் இல்லை. அத­னால் ஒவ்­வொரு நாண­ய­மும் நீண்­ட­கால ஆராய்ச்­சிக்கு வழி­வ­குக்­கிறது. பல புதிய தக­வல்­க­ளைக் கற்­றுத் தரு­கிறது," என்­றார் ரஞ்­சித்.