தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரையிசையில் திருக்குறள்

2 mins read
07aa588f-5222-4243-bbe2-6a986656cbbb
-

தொழிலதிபரும் கொடையாளருமான எஸ்.எம். அப்துல் ஜலீலுக்கு திருவள்ளுவர் விருது

ரச்­சனா வேலா­யு­தம்

பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம், கவி­ய­ரசு கண்­ண­தா­சன், வாலி, வைர­முத்து போன்ற பாட­லா­சி­ரி­யர்­கள் திரைப்­பா­டல்­களில் திருக்­கு­ற­ளைக் கையாண்ட விதத்தை ஆராய்ந்த நிகழ்ச்சி தமிழ்­மொழி விழா­வின் அங்­க­மாக கடந்த 2ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது.

"திரை இசை­யில் திருக்­கு­றள்" எனும் தலைப்­பில் சிராங்­கூன் சாலை­யில் அமைந்­துள்ள பிஜிபி திரு­மண மண்­ட­பத்­தில் நடந்த நிகழ்ச்­சிக்கு தமிழ்­மொழி பண்­பாட்டு கழ­கம் ஏற்­பாடு செய்­தது. மலே­சிய வானொலி, தொலைக்­காட்­சிப் புகழ் சி. பாண்­டித்­துரை திரைப்­பட இசை­யில் இடம்­பெற்ற திருக்­கு­றள்­களை சுட்டி விளக்­கி­னார்.

"திருக்­கு­றள் கூறும் விழு­மி­யங்­க­ளைத் தொடர்ந்து வாழ்க்­கை­யில் கடைப்­பி­டிக்­கி­றோமா என்று நாம் யோசிக்க வேண்­டும். இக்­கு­றள்­களை அழ­கா­க­வும் எளி­மை­யா­க­வும் மக்­க­ளி­டம் கொண்டு செல்­லும் திரைப்­ப­டப் பாடல்­கள் மூலம் திருக்­கு­ற­ளின் பொருளை அறி­கி­றோம்" என்­றார் திரு பாண்­டித்­துரை. பாடல், நகைச்­சுவை கலந்து இரண்­டரை மணி நேரம் நீடித்த இந்த அங்­கத்­தைப் பார்­வை­யா­ளர்­கள் ரசித்­த­னர்.

இந்­நி­கழ்ச்­சி­யில் பிர­பல தொழி­ல­தி­ப­ரும் சமூ­கத் தலை­வ­ரு­மான எஸ்.எம்.அப்­துல் ஜலீ­லுக்கு திரு­வள்­ளு­வர் விருது வழங்­கப்­பட்­டது. முப்­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சமூ­கத்­திற்கு ஆற்­றி­வ­ரும் சேவைக்­கா­க­வும் நிதி ஆத­ர­வுக்­கா­க­வும் திரு ஜலீ­லுக்கு இவ்­வாண்டு விருது அளிக்­கப்­பட்­டது.

அத்­து­டன், திருக்­கு­றளை ஒட்டி நடை­பெற்ற பல்­வேறு போட்­டி­களில் வெற்றி பெற்ற மாண­வர்­க­ளுக்கு நிகழ்ச்­சி­யின் முதல் இரண்டு மணி நேரத்­தில் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன. பாலர் பள்ளி முதல் உயர்­நி­லைப் பள்ளி வரை­யுள்ள கிட்­டத்­தட்ட 200 மாண­வர்­கள் பரி­சு­பெற்­ற­னர்.

"அடுத்த தலை­மு­றை­யி­ன­ரான மாண­வர்­கள் தொடர்ந்து வீட்­டில் தமி­ழில் பேச ஊக்­கு­விக்க வேண்­டும். திருக்­கு­ற­ளின் முக்­கி­யத்­து­வத்­தை­யும் அழ­கை­யும் அவர்­க­ளுக்கு எடுத்­துக்­கூற வேண்­டி­யது நமது கடமை," என்­று சிறப்பு விருந்­தி­ன­ரான முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இரா. தின­க­ரன் கூறினார்.

"இது­போன்ற நிகழ்ச்­சி­களை கழ­கம் தொடர்ந்து ஏற்­பாடு செய்ய மக்­க­ளின் ஆத­ரவு முக்­கி­யம். உல­க­மெங்­கும் பர­வி­யுள்ள திருக்­கு­றளை மாண­வர்­க­ளி­ட­மும் பெற்­றோ­ரி­ட­மும் எடுத்­துச்­செல்ல 37 ஆண்­டு­க­ளாக நடை­பெ­றும் இந்­நி­கழ்ச்சி நல்­வ­ழி­யாக அமைந்­துள்­ளது," என்றார் தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத்­தின் தலை­வர் மு. ஹரி­கி­ருஷ்­ணன்.

எனி­னும், தமிழ்­மொழி விழா நிகழ்ச்­சி­க­ளுக்­கு முதன்­மு­றை­யா­கச் சென்ற 46 வயது வேணிக்கு நிகழ்ச்­சி­யின் நீளம் தொய்வை ஏற்­ப­டுத்­தி­யது.

"நிகழ்ச்சி நிர­லில் பரிசு அங்­கம் பற்­றிய விவ­ர­மில்லை. ஆறு மணி தொடங்கி எட்­டரை மணிக்கு முடி­யும் என்று எதிர்­பார்த்த நிகழ்ச்சி, 10 மணிக்­கு மேல்­தான் முடிந்­தது. பரி­ச­ளிப்­பின் போது குழப்­ப­மும் நில­வி­யது. முக்­கிய அங்­கம் சுவை­யாக இருந்­தா­லும் அதிக நேரம் நீடித்ததால் நிகழ்ச்சி சோர்வை உண்­டாக்­கி­யது. எங்­க­ளைப் போன்ற புதிய பார்­வை­யா­ளர்­களை ஈர்க்க ஏற்­பாட்­டா­ளர்­கள் திட்­ட­மி­டலை மேம்­ப­டுத்த வேண்­டும்," என்று திரு­வாட்டி வேணி கருத்­து­ரைத்­தார்.