உணர்வுகளைச் சுற்றி அமைந்த அதிபதி நாடகம்

2 mins read
e6273d9c-7976-4eae-9b41-49ff84240f2a
-

மோன­லிசா

மனி­த­ சிந்­த­னைக்­குள் இடம்­பெறும் பல­வித உணர்வு­களை மையப்­ப­டுத்­திய நாட­கம் ஒன்று தமிழ்­மொழி விழா­வை­யொட்டி அண்­மை­யில் அரங்­கே­றி­யது.

மனி­த­னின் மூளைக்­குள் நடை­பெ­று­வ­தாக சித்­தி­ரிக்­கப்­பட்ட இந்நாட­கத்­தில் வாழ்­வில் வெற்­றி­ய­டைய எந்த உணர்ச்சி முன்­னிலை வகிக்க வேண்­டும் என்­ற பார்வையும் முன்வைக்­கப்­பட்­டது.

'அதி­பதி' என்ற இந்த மேடை நாட­கம் அதி­பதி அனைத்­து­லக நாடக நிறு­வ­னத்­தின் ஏற்­பாட்­டில் இம்­மா­தம் 6, 7 தேதி­களில் அங் மோ கியோ வட்­டா­ரத்­தில் உள்ள அடித்­தள மன்ற அரங்­கில் நடை­பெற்­றது.

இளை­யர்­க­ளி­டம் இந்­நா­ட­கத்­தின் கருப்­பொ­ருள் சென்றுசேர வேண்­டும் என்பது தங்கள் நோக்­கம்­ என்று ஏற்­பாட்­டுக் குழு­வி­னர் தெரி­வித்­த­னர்.

அதன்பொருட்டு மாண­வர் ­க­ளுக்கென தனியே முதல் நாளி­லும் பொது­மக்­க­ளுக்கு இரண்­டாம் நாளி­லும் மொத்­தம் மூன்று காட்­சி­கள் அரங்­கே­றி­ன.

முதல் நாள் மாண­வர்­க­ளுக்­கென அரங்­கே­றிய இரண்டு காட்­சி­க­ளி­லும் தொடக்­க­நிலை, உயர்­நிலை, பல­து­றைத் தொழிற்­கல்­லூரி, தொழில்­நுட்­பக் கல்­விக்கழக மாண­வர்­கள் என மொத்­தம் 520க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர்.

"மாண­வர்­கள் மிகுந்த ஆர்­வத்­து­ட­னும் ஆர­வா­ரத்­து­ட­னும் இந்­நா­ட­கத்தைக் கண்டுகளித்­ததே எங்­கள் வெற்றி.

"நாட­கத்­தின் இறு­திக்­கட்­டம் மன­தில் நின்­ற­தாக பல மாண­வர்­கள் கூறி­யது நெகிழ்ச்­சி­யாக இருந்­தது" என்று கூறி­னார் இந்­நா­ட­கத்­தின் கலை இயக்­கு­நர் ஆர். புக­ழேந்தி.

அதி­பதி அனைத்­து­லக நாடக நிறு­வ­னத்­தின் நிறு­வ­ன­ரு­மான இவர், வாழ்­க்கை விழு­மி­யங்­க­ளை­யும் நன்­னெ­றி­க­ளை­யும் பிர­தி­ப­லிப்­ப­தில் நாட­கக் கலை முக்­கி­யப் பங்கு வகிக்­கிறது என்­று கூறினார்.

அதை இளை­யர்­க­ளி­டம் கொண்டு செல்­லும் நோக்­கி­ல் இத்­தொண்டு நிறு­வ­னத்தை 2013ஆம் ஆண்டு முதல் நடத்தி வரு­வ­தா­க­வும் குறிப்பிட்டார்.

இந்­நா­ட­கத்­தில் நடித்த நடி­க­ரும் இந்­நி­று­வ­னத்­தின் உறுப்­பி­ன­ரு­மான சிவா­னந்த் ராம­கிருஷ்­ணன், 30, "நாட­கத்­தின் நகைச்­சு­வைக் கூறு­க­ளை­யும் ஒவ்­வோர் அசை­வை­யும் மாண­வர்­கள் கூர்ந்து கவ­னித்து சிரித்­தும் கை­தட்­டி­யும் மகிழ்ந்­தது இக்­கால மாண­வர்­க­ளின் அறி­வுக்­கூர்­மையைக் காட்­டி­யது." என்று கூறி­னார்.

"இந்­நா­ட­கத்­தில் நடித்­தது மறக்­க­மு­டி­யாத அனு­ப­வம். பல வாழ்­க்கைப் பாடங்களைக் கற்கும் ஒரு வாய்ப்­பா­கவே இதைக் கரு­தி­னேன்," என்று­நா­ட­கத்­தில் நடித்தவரும் உயர்­நிலை மூன்­று மாணவருமான தர்­ஷன் மூர்த்தி, 15, சொன்னார்.

இந்­நி­கழ்­வில் பங்­கு­கொண்ட பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாண­வ­ரான கெள­தம் கார்த்­திக், 16, "நாட­கம் மிக­வும் பிரம்­மாண்­ட­மாக இருந்­தது. வச­னங்­களும், பாடல்­களும் நாட­கத்­திற்­குள் பார்­வை­யா­ளர்களை இழுக்­கும் வண்­ணம் அமைந்­தன. திரைப்­ப­டங்­கள் போலவே நாட­கங்­களும் மிக­வும் சுவா­ர­சி­ய­மாக இருப்­பதை இங்கு உணர்ந்­தேன்" என்று கூறி­னார்.