தமிழ்க் கல்வி ஊட்டும் குடும்பம்

தமிழ்க் கல்வி ஊட்டும் குடும்பம்

2 mins read
f3e11c14-96df-4a80-a6ee-3aa0b2fa91b5
-

மாண­வர்­க­ளுக்­குத் தமி­ழூட்­டு­வது எப்­படி என்­பது திரு மசூது குடும்­பத்­தில் எப்­போ­தும் குடி­கொண்­டி­ருக்­கும் ஒரு சிந்­தனை, ஓர் உரை­யா­ட­லும்­கூட.

தத்­தம் குடும்­பங்­களில் முதல் பட்­ட­தா­ரி­க­ளான திரு மசூது, அவ­ரின் மனைவி திரு­வாட்டி மரி­யம் பீவி, இரு­வ­ரும் தேர்ந்­தெ­டுத்­துக்­கொண்­டது தமி­ழா­சி­ரி­யர் பணியே.

ஐம்­ப­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக தொடக்­கப்­பள்­ளி­களில் நீடித்­துள்ள திரு மசூது-மரி­யம் தம்­ப­தி­யின் தமிழ்க்­கல்­விப் பய­ணம் பல மாண­வர்­க­ளின் மொழி­வ­ளத்­தைச் செதுக்­கி­யுள்­ளது. தமி­ழா­சி­ரி­யர் பணி­யைத் தாய்­மைக்கு ஒப்­பி­டு­கி­றார் 69 வயது திரு­வாட்டி மரி­யம்.

உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி உயர்­நி­லைப் பள்­ளி­யில் பயின்ற அவ­ருக்­குள் தமி­ழார்­வம் நீங்­கா­மல் நிலைத்­தி­ருந்­தது. அதற்­கேற்ற வாய்ப்­பைத் தேடிக்­கொண்­டி­ருந்த அவ­ருக்கு, நம்­பிக்கை ஊட்டி தமி­ழா­சி­ரி­யர் ஆக ஊக்­கு­வித்­தார் திரு மு.அ. மசூது.

மண­மான பின்­னர், குடும்­பச் சுமைக்­கி­டையே தமி­ழா­சி­ரி­ய­ரா­கும் உறு­தி­யு­டன் தேசிய கல்­விக் கழ­கத்­தில் இணைந்து திரு­வாட்டி மரி­யம் படித்­தார். கரு­வுற்­றி­ருந்த சம­யத்­தில் தமது இறு­தி­யாண்­டுத் தேர்வை முடித்­துத் தேர்ச்­சி­யும் பெற்­றார்.

பள்­ளிப் பிள்­ளை­க­ளு­ட­னான தொடர்பு தமிழ்­மொழி வகுப்­பு­டன் நின்­று­வி­டு­வ­தில்லை என்­ப­தில் திரு­வாட்டி மரி­யம் ஆணித்­த­ர­மான நம்­பிக்கை கொண்­டுள்­ள­வர்.

"தமிழை எவ்­வாறு வாழ்­வோடு தொடர்­பு­ப­டுத்­த­லாம் என்­ப­தில் வழி­காட்ட மாண­வர்­க­ளின் பெற்­றோ­ரு­டன் அவர் அணுக்­க­மாக உழைத்­தார். கதை­கள், பாடல்­கள் என சிர­மம் எடுத்து தமிழ்­மொ­ழித் திறன்­க­ளு­டன் தமி­ழு­ணர்­வைப் புகட்ட முயற்சி எடுத்­தார்," என்று திரு­வாட்டி மரி­யம் பற்றி குறிப்­பிட்­டார் திரு மசூது, 73.

தாம் இரு­பது ஆண்­டு­கள் பணி­யாற்­றிய ரூலாங் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளின் படைப்­பு­கள் வகுப்­பைத் தாண்டி பொது­வில் இடம்­பெ­றும் வண்­ணம் 'மல­ரும் மொட்­டுக்­கள்' எனும் நூலை திரு­வாட்டி மரி­யம் வெளி­யிட்­டார்.

படைப்­பாற்­றலை ஊக்­கு­விப்­பது தமிழ்­மொ­ழி­யின்­பால் மாண­வர்­களை ஈர்க்­க­வல்­லது என்­பது இத்­தம்­பதி பல­முறை பரி­மா­றிக்­கொள்­ளும் சிந்­த­னை­யா­கும்.

இந்­தத் தம்­ப­தி­யின் வழித்­த­டத்­தைப் பின்­பற்றி 23 ஆண்­டு­க­ளாக தமி­ழா­சி­ரி­யர் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளார் இவர்­க­ளின் மூத்த மகள் திரு­மதி நசீமா பானு. கணி­தம், கணக்­கி­யல் என மற்ற பாடங்­க­ளைக் கற்­பிக்க ஆலோ­சித்த அவ­ரின் மனம், பெற்­றோ­ரின் தமிழ்ப்­ப­ணி­யைத் தொடர்­வ­தி­லேயே இணக்­கம் கண்­டது.

அக்­கா­லத்­தில் தமிழ் எழுத்­து­கள் அறி­யாத மாண­வர்­களை திரு மசூ­தும் திரு­வாட்டி மரி­ய­மும் கையா­ள­வேண்­டிய நிலை அதி­கம். தற்­போது தமிழ்ப் பின்­பு­ல­மும் தமி­ழில் பேசும் குடும்­பப் பின்­ன­ணி­யும் இல்­லாத சூழல்­க­ளி­லி­ருந்து மாண­வர்­கள் வரு­வ­தைச் சுட்­டி­னார் திரு­மதி நசீமா.

"சமூ­கத்­தில் கூடு­தல் ஆத­ர­வும் வாய்ப்­பு­களும் இருந்­தா­லும், பெற்­றோ­ரின் பங்கே பிள்­ளை­க­ளின் தமிழ்­மொழி ஈடு­பாட்டுக்கு மிகவும் அவசியம்.

"எனது அம்­மா­வைப்­போல, பெற்­றோ­ரு­டன் நெருக்­க­மாக இருந்து தமிழர் வீடு­க­ளை­யும் எட்ட முயற்சி செய்து வரு­கி­றேன்," என்­றார் திரு­மதி நசீமா, 44.