கடும் மழையிலும் குன்றாத பக்திப் பரவசம்

கடும் மழையிலும் குன்றாத பக்திப் பரவசம்

4 mins read
5979edb5-1972-4b8b-a129-0554f68a5385
குடமுழுக்கு விழாவிற்கான தீர்த்தக்கலசங்களைத் தலையில் ஏந்தி நிற்கும் சிவாச்சாரியர்கள். படங்கள்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், கி. ஜனார்த்தனன், மோனலிசா -
multi-img1 of 4

தேங்க் ரோடு அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லில் நேற்று வியா­ழக்கிழமை (ஜூன் 1) நடை­பெற்ற திருக்­கு­ட­மு­ழுக்கு விழா­வில் கடும் ­ம­ழை­யை­யும் பொருட்­படுத்­தாமல் ஏறத்­தாழ 30,000 பக்­தர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

குட­மு­ழுக்கை கண்­கு­ளிரக் கண்ட மூத்­தோர்­கள்

1930களில் 'சிங்­கப்­பூ­ரார் வீடு' என்று அன்­பு­டன் அழைக்­கப்­பட்ட பழம்­பெ­ரும் பாரம்­ப­ரி­யம் உடைய குடும்­பத்­தைச் சார்ந்த 83 வய­தாகும் லீலா­வதி சுப்­பையா, இது­வரை­ இதே கோயி­லில் நான்­கிற்­கும் மேற்­பட்ட குட­மு­ழுக்­குகளைக் கண்­டுள்ளதாகக் கூறினார்.

ராஜ­கோ­பு­ரம் கொண்­டுள்ள தற்­போ­துள்ள கோயி­லைக் கட்ட முயற்சி மேற்­கொண்ட தமிழ்க்­குடும்­பங்­களில் தனது குடும்­ப­மும் ஒன்று என்று கூறிய இவர், இக்­கோ­யி­லின் பூர்­வீகக் குடும்­பங்­களில் ஒன்­றாக விளங்­கு­வதில் பெரு­மி­தம் கொள்­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.

இளம்­வ­யது முதலே இக்­கோ­யி­லின் வர­லாற்­றை­யும் சக்­தி­யை­யும் வளர்ச்­சி­யை­யும் தான் கண்டு­வ­ரு­வ­தாகக் கூறி மனம்­நெ­கிழ்ந்­தார் 70 வய­தா­கும் கிருஷ்­ண­வேணி சீனி­வா­சன்.

ஏழு பிள்­ளை­க­ளின் தாயான இவர், தான் ஆரோக்­கி­ய­மாக இக்­கு­ட­மு­ழுக்கை காண நேர்ந்­ததே முரு­க­னின் அருளால்தான் என்று கூறி­னார்.

கோயி­லின் புதுப்­பிப்புப் பணி­கள் செவ்­வனே நடந்­தே­றி­யதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தைப்­பூ­சத்­ தி­ரு­விழா வழக்­க­மான முறை­யில் நடை­பெ­ற­வி­ருப்­பதைக் குடும்­பத்­து­டன் தான் எதிர்­நோக்­கு­வ­தா­க­வும் இவர் தெரி­வித்­தார்.

இத்­தனை காலம் நல்­ல­தொரு நிம்­ம­தி­யான ஆரோக்­கி­ய­மான வாழ்­வ­ளித்த முரு­க­னுக்கு நன்­றி­கூற வந்­த­தாகக் கூறி­னார் சரோஜா வர­த­ராஜ், 84.

"இயற்­கை­யின் ஆசி­யோடு நன்­மு­றை­யில் நடந்­தே­றிய குட­முழுக்கு விழா­வில் அனைத்து ஏற்­பா­டு­களும் சிறப்­பாக இருந்­தன. குறிப்­பாக, சுவை­யான அன்­ன­தான உணவு மிகுந்த மன­நிறைவை அளித்­த­து," என்றார் சரோஜா வர­த­ராஜ்.

இயலாதவர்களுக்கும் இனிமையான தரிசனம்

பெரு­மூளை வாதத்­தி­னால் பாதிக்­கப்­பட்­டுள்ள 18 வயது தன்ய­ஸ்ரீ வர்­தினி சிவக்­கு­மார், தனது தாயார் மற்­றும் மூத்த சகோ­த­ரி­யு­டன் குட­முழுக்கு நிகழ்­வி­னைக் காண வந்­தி­ருந்­தார்.

முரு­கன் தனக்கு மிக­வும் விருப்­ப­மான தெய்­வம் என்று கூறிய இவர், குழந்­தைத்­த­னம் மாறா­மல் மழையை ரசித்து குதூ­க­லித்­தார்.

இளம்­வ­ய­தி­லி­ருந்தே இந்தக் கோயில் மீது தன் மக­ளுக்கு அலா­திப்­பி­ரி­யம் என்­றார் தன்­ய ஸ்ரீ­யின் தாயார் பால­சுந்­தரி சிவக்­கு­மார், 50.

சிறப்­புத் தேவை­யுடை­ய­வர்­களைத் தொண்­டூ­ழி­யர்­கள் நன்­மு­றை­யில் கவ­னித்து, வேண்­டிய வச­தி­களைச் செய்து கொடுத்­த­தா­க­வும் அவர் பாராட்­டி­னார்.

கடந்த 50 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லின் தீவிர பக்­த­ராக உள்ள 64 வயது வள்­ளி­யம்மை சக்­தி­யப்­பன், கொட்­டும் மழை­யி­லும் தன்­னு­டைய சக்­கர நாற்­கா­லி­யில் மழை­யங்கி அணிந்தவண்­ணம் குட­மு­ழுக்கு நிகழ்­வினைக் கண்­டு­க­ளித்­தார்.

எட்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு தன்­னு­டைய இடுப்­பில் ஏற்­பட்ட உடற்­கோ­ளா­றால் சக்­கர நாற்­கா­லி­யு­டன் வலம்­வரத் தொடங்­கிய இவர், அதி­காலை 6 மணிக்கே முரு­கனைத் தரி­சிக்க கோயி­லுக்கு வந்­தார்.

இவர் ஒவ்­வோர் ஆண்­டும் இக்­கோ­யி­லுக்கு முடிக் காணிக்கை செலுத்­து­வதையும் வழக்­க­மாகக் கொண்­டுள்­ளதாகத் தெரிவித்தார்.

கோயி­லின் முகப்­பில் வைக்­கப்­பட்­டி­ருந்த எல்­இடி திரை­யில் முழு குட­மு­ழுக்கு நிகழ்­வி­னை­யும் மிக அரு­கில் இருந்து பார்த்த இவர், கோபு­ரத்­தின் மேலேறி நேரில் கண்­ட­தைப் போன்று உணர்ந்­த­தாக நெகிழ்ச்­சி­யு­டன் கண்­ணீர்­மல்கக் கூறி­னார்.

குடமுழுக்கில் குதூகலித்த குடும்பத்தினர்

கடந்த 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிங்­கப்­பூ­ரில் வாழும் 44 வயது கற்­ப­க­வி­நா­ய­கர் ராமையா, தற்­போது 11 வய­தா­கும் தன் மூத்த மகன் ஒரு வயதாக இருக்­கும்­போது முதன்­மு­த­லில் நடக்க ஆரம்­பித்­ததே இந்­தக் கோயி­லில்தான் என்று நினை­வு ­கூர்ந்­தார். மனைவி, இரு மகன்­கள் என குடும்­ப­மாக அதி­கா­லை­யி­லேயே வந்­தி­ருந்த இவர் தன் வாழ்­வின் ஒவ்­வொரு முக்­கி­ய­ தரு­ணத்­தி­லும் முரு­கன் துணை­நின்­றதை நன்­றி­யு­டன் நினைத்­துப்­பார்ப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார். அவ்­வப்­போது பாத­யாத்­திரை, தைப்­பூ­சத்­தி­ரு­வி­ழா­வின்போது பால்­கு­டம் என முரு­க­னுக்­கும் தங்­கள் குடும்­பத்­திற்­கு­மான பந்­தத்தை உறு­தி­ப்ப­டுத்தி வரு­வ­தா­க­வும் இவர் தெரி­வித்­தார்.

இதே­போல, கண­வர், ஏழு வயது மகள், இரண்டு வயது மகன் என குடும்­பத்­து­டன் அதி­காலை 5 மணிக்கே வந்­தி­ருந்­தார் இல்­லத்­த­ர­சி­யான கோமதி ராமக்­கி­ருஷ்­ணன், 36. பிள்­ளை­க­ளுக்கு மழை­யங்கி அணி­வித்து அதற்­கு­மேல் குடை­யும் பிடித்து குட­முழுக்­கினை இக்­கு­டும்­பத்­தி­னர் கண்டு­க­ளித்­த­னர்.

இந்த வய­தி­லேயே பிள்­ளை­களுக்குப் பக்­தி­யு­ணர்வைப் புகட்­டு­வது அவர்­க­ளுக்­குள் ஒழுக்­கத்தை மேம்­ப­டுத்­தும் என்று கூறிய கோமதி, முரு­க­னின் ஆசீர்­வா­தமே இந்த மழை என்­றும் மகிழ்­வு­டன் கூறி­னார்.

தோள்கொடுத்த தொண்டூழியர்கள்

தொண்டு நிறு­வ­னத்­தில் அதி­கா­ரி­யாகப் பணி­பு­ரி­யும் மீனா அண்­ணா­மலை, 46, பல்­லா­யி­ரக்­கணக்­கான பக்­தர்­கள் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்­வில் அனை வருக்கும் நாற்­காலி, உணவு, தண்­ணீர், மழை­யங்கி, அடிப்­படை மருத்­துவ வசதி உள்­ளிட்­ட­ வச­தி கள் நன்­மு­றை­யில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­தாகக் கூறி­னார்.

இக்­கோ­யி­லில் 40 ஆண்­டு­களுக்­கும் மேலாக இயங்­கி­வ­ரும் தொண்­டூ­ழி­யர் குழு­வில் கடந்த 24 ஆண்­டு­க­ளாக தொண்­டூ­ழி­யம் செய்­து­வ­ரும் நா. மீனாட்சி சுந்­த­ரம், 54, "இக்­கு­ட­மு­ழுக்கு நிகழ்­வின் ஆயத்தப் பணி­களை இரு மாதங்­க­ளுக்கு முன்­ன­தா­கவே 600க்­கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­கள் ஒன்­றி­ணைந்து தொடங்­கி­னோம். பல பக்­தர்­கள் கைகூப்பி நன்றி தெரி­வித்­தது மன­நி­றை­ வளிக்­கிறது" என்று கூறி­னார்.