தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயரும் விலை, தொடரும் கவலை

6 mins read
79f2a937-8727-4bff-bec9-97267f24aaf7
-
multi-img1 of 5

கட்டுப்படியான விலையில் சுவையான உணவு வேண்டுமெனச் சிங்கப்பூரர்கள் அடிக்கடி நாடுவது மூலை முடுக்குகளிலெல்லாம் அமைந்துள்ள உணவங்காடி நிலையங்களைத்தான். ஆனால் அண்மைய ஆண்டுகளாக அதிகரித்து வரும் செலவினங்களால் உணவங்காடிகளிலும் விலை கூடிவிட்டது. கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் இதனை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்று தமிழ் முரசு அறிந்து வந்தது.

கடை வாடகை, உண­வுப்­பொ­ருள்­கள் ஆகி­ய­வற்­றுக்கு உண­வங்­கா­டிக் கடை வைத்­தி­ருப்­போர் கூடு­த­லாக செலவு செய்­வ­தாக 'த மாக்­கான் இன்­டெக்ஸ் 2.0' (The Makan Index 2.0) ஆய்­வறிக்கை தெரி­வித்­துள்­ளது.

கொள்கை ஆய்­வுக் கழக ஆய்­வாளர் குழு­வி­னர் 829 கடைக்­கா­ரர்­க­ளி­டம் கேட்­ட­றிந்­த­தில் உண­வுக் கடைக்­காரர்­கள் பல­ரும் முடிந்­த­வரை அதே விலை­யில் உணவை விற்க முயல்­வ­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது.

உணவு தொடர்­பில் குடும்­பங்­கள் செய்­யும் செல­வின் பெரும்­ப­குதி, உண­வங்­காடி, உணவு நிலைய, காப்பிக் கடை ஆகி­ய இடங்களில் உணவை வாங்­கச் செல­வி­டப்­ப­டு­வ­தாக குடும்­பச் செல­வி­னக் கருத்­தாய்வு கண்­டறிந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரின் பொருள், சேவை­க­ளுக்­கான விலை மாற்­றங்­க­ளைக் குறிக்­கும் மூலாதாரப் பண­வீக்­கம் இவ்­வாண்டு ஜன­வரியில் 5.5 விழுக்­காடு உயர்ந்­த­போது உணவுக் கடை­கள் திடுக்­கிட்­டன.

14 ஆண்­டு­களில் இது­வரை காணாத விலை உயர்வு அது.

இதற்­கி­டையே, பொருள், சேவை வரி 7 விழுக்­காட்­டி­லி­ருந்து 8 விழுக்­காட்­டுக்கு உயர்த்­தப்­பட்­டது.

அத­னுடன் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல், விநி­யோ­கத் தொடர்­களில் இடை­யூ­று­கள், முன்பு நில­விய மலே­சி­யா­வின் கோழி ஏற்­று­ம­தித் தடை, ரஷ்யா-உக்­ரேன் போர் ஆகி­ய­வற்­றாலும் உணவு விலை­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இக்­கட்­டான நிலை­யில்

கடைக்­கா­ரர்­கள்

மலி­வான உண­வுக்­காக வாடிக்­கை­யாளர்­கள் தங்­களை நாடி வரு­வ­தால் எண்­ணெய் உள்­ளிட்ட மூலப் பொருள்­களின் விலை ஏற்றம் தம்­மைப் போன்ற கடைக்­காரர்­க­ளைத் திணற வைப்­ப­தாக 'சிந்தா­மணி' உண­வுக்­கடை உரி­மை­யா­ளர் ரமேஷ், 50, தெரி­வித்­தார்.

"இத­னால் போட்­டித்­தன்­மை­யும் சங்­க­டங்­களும் ஏற்­ப­டு­கின்­றன. வாடிக்­கை­யா­ளர்­கள் கூடு­தல் செலவை ஏற்­ப­தி­லும் எங்­க­ளுக்கு விருப்­ப­மில்லை. எனவே இது சவா­லான ஒரு சூழல்," என்று 2009ஆம் ஆண்­டில் உண­வுக்­க­டைத் தொழில் ஆரம்­பித்த திரு ரமேஷ் கூறி­னார்.

என்­டி­யு­சிக்­குக் கீழ் இயங்­கி­வ­ரும் ஓர் உணவு நிலை­யத்­தில் கடை வைத்­தி­ருப்­ப­தால் விலையை உரிய அனு­மதி­யு­டன்­தான் ஏற்ற முடி­யும் என்று புக்­கிட் பாஞ்­சாங்­கில் உள்ள 'முகம்­மது அயான் ரோஜாக் கடை' உரி­மை­யாளர் முகை­தீன் அப்­துல் ரஹிம், 42, கூறி­னார்.

மூலப்­பொ­ருள்­களின் விலை­யேற்­றத்­தால் தாம் அழுத்­தத்­திற்­குள்­ளா­வதா­க­வும் குறிப்­பிட்­டார்.

தம் தந்தை, அண்­ண­னின் உணவுக்­க­டை­களில் 32 ஆண்­டு­களாகப் பணி­பு­ரிந்து சொந்­தக் கடை­யைச் சில மாதங்­க­ளாக நடத்­தி­வ­ரும் திரு ரஹிம், "உண­வுத் தரத்­தை­யும் சேவைத் தரத்­தை­யும் கட்­டிக்­காக்­கும் கடைக்­கா­ரர்­க­ளால் விலை­யேற்­றத்­தைச் சமா­ளிக்க முடி­யும்," என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

சில உண­வங்­கா­டி­கள் குறைந்த தரத்­தில் காய்­க­றி­க­ளைப் பயன்­ப­டுத்­தித் தங்­கள் செல­வைக் குறைக்­கப் பார்க்­கின்­றன என்று 'தர்ஷா' உண­வுக் கடை­யின் உரி­மை­யா­ளர் விஜய ரமேஷ், 42, குறிப்­பிட்­டார்.

"ஒரு கிலோ கோழி முன்பு மூன்று வெள்ளி ஆக இருந்தது. இப்­போது ஐந்து வெள்­ளியாக விலை உயர்ந்­த­போ­தும் கோழி­ உண­வு­வ­கை­களின் விலையை 20, 30 காசு­தான் உயர்த்த முடி­யும். இது சவா­லாக இருந்­தா­லும் உண­வின் சுவை­யை­யும் ஆரோக்­கி­யத்­தை­யும் கட்­டிக்­காப்­பது முக்­கி­யம்," என்று கூறி­னார்.

இருந்­த­போ­தும் தரத்­தில் குறி­யாய் இருந்து விலை­யேற்­றத்­தைப் பற்றி அதி­கம் கவ­லைப்­ப­டா­மல் இருப்­ப­தும் முடி­யாத ஒன்று என்­றார் தாமான் ஜூரோங் உணவு நிலை­யத்­தில் 'தாஜ்' உண­வுக் கடையை நடத்தி வரும் பழனி பாண்டி, 46.

"என் வாடிக்­கை­யா­ளர்­களில் பாதிப் பேர் குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் என்­ப­தால் இந்த விலை­யேற்­றம் அவர்­களை வேறு உணவு இடங்­களை நாட வைக்­கும்," என்று அவர் கூறி­னார்.

'மூன்று வேளை­யும் உண்­பது

கட்­டுப்­ப­டி­யா­காது'

விலை­யேற்­றம் குறித்து வாடிக்­கை­யாளர்களும் தங்­க­ளது கருத்­து­களை தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

திறன் மேம்­பாட்டு பயிற்­று­விப்­பாளர் அப்­துல் மாஜிட், 57, தாமும் தம் மனை­வி­யும் மட்­டுமே வீட்­டில் இருப்­ப­தால் இந்த விலை உயர்வு தங்­களை அதி­கம் பாதிக்­க­வில்லை என்று கூறி­னார்.

ஆனால், உண­வங்­காடி உணவை அதி­கம் சாப்­பி­டும் அர­சாங்க ஊழி­யர் தி. சந்­தி­ர­மோ­கன், 65, தொடர் விலை அதி­க­ரிப்­பால் தாம் கவலை அடை­வதா­கக் கூறி­னார்.

தாமும் கவலை அடை­வ­தா­கக் கூறும் லாரி ஓட்­டு­நர் முகம்­மது சுஜ்­ஜு­தின், 54, மூன்று வேளை­யும் உணவங்­கா­டி­களில் சாப்­பி­டு­வ­தால் தற்­போ­தைய நிலை கட்­டுப்­ப­டி­யா­காது என்­றார்.

ஒரு குடும்­பத்­துக்­கான ஒரு­நாள் உண­வுச் செலவு $68

உணவு விலை­கள் தொடர்ந்து ஏறும் அள­வுக்கு மக்­க­ளின் சரா­சரி சம்­ப­ளம் உய­ருமா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. இதற்­கி­டையே சூடான, சுவை­யான உணவை வச­தி­யா­கப் பெற சிங்­கப்­பூ­ரர்­கள் உண­வங்­கா­டி­க­ளைத் தொடர்ந்து நாடு­கின்­ற­னர்.

இருப்­பி­னும் 'கோப்­பித்­தி­யாம்', உணவு நிலை­யங்­கள், உண­வங்­காடி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் ஒரு­வர் மூன்று வேளை உணவு உண்­டால் சரா­ச­ரி­யாக ஒரு­நா­ளில் $16.89, வாரத்­தில் $118.23 எனச் செல­விட நேரும் என்று 'த மாக்­கான் இன்­டெக்ஸ் 2.0' ஆய்­வ­றிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது.

பெற்­றோர், இரு பதின்ம வயது பிள்­ளை­கள் அடங்­கிய ஒரு குடும்­பம் ஒரு­நா­ளில் $67.56 செல­விட வேண்டி­யி­ருக்­க­லாம்.

விலை ஏற்­றத்தை எதிர்­கொள்­ளும் முயற்­சி­கள்

உணவு விலை­யைக் குறை­வாக வைப்­ப­தற்­கான முயற்­சி­யில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் வாட­கைக்கு விட்டுள்ள 374 காப்­பிக் கடை­க­ளி­லும் 2026ஆம் ஆண்­டுக்­குள் கட்­டுப்­ப­டி­யான விலை­யில் உணவு விற்­கப்­படும்.

இத்­திட்­டத்­தின்­படி உண­வின் விலை 3 வெள்­ளிக்­கும் 3.50 வெள்­ளிக்­கும் இடைப்­பட்­ட­தாக இருக்­கும்.

'கோப்­பித்­தி­யாம் கார்­னர்' இதே விலை­யில் கட்­டுப்­ப­டி­யான உண­வுத் தெரி­வு­களை வழங்கி வரு­கிறது.

அத்­து­டன் அதன் 33 'ரைஸ் கார்­டன்' கடை­களில் குறைந்த விலை உண­வுத் தெரிவு வழங்­கப்­ப­டு­வ­தாக 'ஃபேர்பி­ரைஸ்' குழு­மப் பேச்­சா­ளர் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

குறைந்த விலை­யில் கிடைக்­கக்­கூ­டிய உணவு வகை­கள் குறித்து கடை­யில் ஒட்­டப்­படும் சுவ­ரொட்­டி­களில் தக­வல் இடம்­பெ­று­வதை மூத்தோ­ரும் அவர்­க­ளின் குடும்­பத்­தாரும் படித்து அறிந்­து­கொள்­ள­லாம் என்­றார் பேச்­சா­ளர்.

'பட்­ஜெட்' உணவை எங்கே பெறுவது என்­பதை மக்­கள் அறிந்­திட இணை­யத்­த­ளம் ஒன்­றும் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

சாலைப் பெயர் அல்­லது தங்­க­ளின் முக­வ­ரி­யி­லுள்ள அஞ்­சல் குறி­யீட்டை மக்­கள் இந்த இணை­யத்­த­ளத்­தில் உள்­ளிட்டு தங்­க­ளுக்கு அரு­கில் குறைந்த விலை­யில் விற்­கப்­படும் உண­வுத் தெரி­வு­கள் பற்றி அறிந்­து­கொள்­ள­லாம்.

உண்மை நிலையை ஏற்­கு­மாறு

ஊக்­கு­விக்­கும் நிபு­ணர்­கள்

குளிர்­ப­த­னப் பெட்­டி­யில் உறைய வைக்­கப்­பட்ட உண­வுப் பொட்­ட­லங்­க­ளைச் சூடாக்கி உண்­ணும் வழக்­கம் பல நாடு­களில் இருந்­து­ வ­ரு­கிறது.

ஆனால், சிங்­கப்­பூ­ரில் நினைத்த நேரத்­தில் உண­வைச் சுடச்­சு­டச் சாப்­பி­டக்­கூ­டிய வழக்­கம் உள்­ளது, அதையே சிங்­கப்­பூ­ரர்­களும் விரும்­பு­கின்­ற­னர். இது இந்­நாட்டு உண­வங்­காடி நிலை­யங்­க­ளின் தனித்­து­வம் என்­றார் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் வால்­டர் தெசேரா.

"உணவு உட­னுக்­கு­டன் சமைக்­கப்­பட்டு விற்­கப்­ப­டும்­போது அதில் ஊழி­யர் செலவு அடங்­கி­யுள்­ளது. இத­னால் உண­வங்­காடி நிலை­யத்­தில் விற்­கப்­படும் உண­வுக்­கான விலை அதி­க­ரிக்­கிறது," என்று விளக்­கி­னார் அவர்.

உண­வங்­காடி உண­வைக் காட்­டி­லும் உறைய வைத்து விற்­கப்­படும் உண­வைச் சிங்­கப்­பூ­ரர்­கள் தரத்­தில் குறை­வா­கக் கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்ட பேரா­சி­ரி­யர் தெசேரா, அந்­தத் தரத்திற்­காக கூடு­தல் செலவு செய்ய சிங்­கப்­பூ­ரர் தயங்­கு­வது நியா­ய­மா­காது என்றார்.

பேரா­சி­ரி­யர் தெசே­ரா­வின் கருத்தை ஆமோ­தித்­தார் பொரு­ளி­யல் நிபு­ணர் சோங் செங் வூன். ஊழி­யர்­கள் எந்த வேலை­யில் இருந்­தா­லும் தங்­க­ளின் சம்­ப­ளம் உய­ர­வேண்­டும் என விரும்­பு­வர். ஆனால் தாங்­கள் வாங்­கும் உணவு மலி­வாக இருக்­க­வேண்­டும் என்று அவர்­கள் கேட்­கும்­போது உணவங்­கா­டிக் கடைக்­கா­ரர்­கள் ஈட்டும் வரு­மா­னம் உய­ரக்­கூ­டாது என்றா­கி­விடும். அது தவறு என்று அவர் கூறி­னார்.

'உண­வங்­காடி கலா­சா­ரத்­தைப்

பாது­காக்க வேண்­டும்'

சிங்­கப்­பூ­ரின் உண­வங்­காடி கலா­சா­ரத்­தைப் பாது­காக்க வேண்­டும் எனக் கடந்த ஏப்­ரல் மாதம் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்­றில் 93 விழுக்­காட்­டி­னர் கூறி­யி­ருந்­த­னர். 1048 பேரி­டம் சிங்­கப்­பூர் சார்ந்த ஆய்வு அமைப்­பான 'ரைசென்ஸ்' நடத்­திய ஆய்­வில் 10ல் 9 பேர் இவ்­வாறு தெரி­வித்­த­னர்.

உணவு கிடைக்­கும் ஓர் இட­மாக இத்­த­கைய உண­வங்­காடி நிலை­யங்­களை மக்­கள் கரு­து­கின்­ற­னர் என்­றும் உண­வங்­காடி கலா­சா­ரம் ஒரு தேசிய அடை­யா­ளம் என்­றும் கார­ணம் கூறினர்.

இவ்­வாறு உய­ரும் உணவு விலை மக்­க­ளுக்கு அதி­ருப்தி ஏற்­ப­டுத்தி வந்­தா­லும் வெவ்­வேறு இனம், சமூ­கப் பின்­னணி எனப் பாரா­மல் ஒரே கூரை­யின்­கீழ் சிங்­கப்­பூ­ரர்­கள் கூடும் இட­மாக இந்த உண­வங்­காடி நிலை­யங்­கள் விளங்­கு­கின்­றன. மூத்த தலை­மு­றை­யி­னர், இளைய தலை­மு­றை­யி­னர், அடுத்த தலை­மு­றை­யி­னர் என யாவ­ருக்­கும் உண­வுத் தெரி­வு­கள் கொட்­டிக் கிடக்­கும் இட­மா­க­வும் இவை தொடர்ந்து விளங்­கும் என்று நம்­ப­லாம்.