முகம்மது நபியின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியுள்ளது.
இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டியில் தற்போது ஆப்கானிஸ்தான் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
ஷார்ஜாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நடந்த போட்டியில் முதலில் பாகிஸ்தான் பந்தடித்தது.
20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. நபி 12 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தானுக்கு நபி மீண்டும் கைகொடுத்தார். 38 ஓட்டங்கள் எடுத்த நபி, ஆப்கானிஸ்தானை 17.5ஆவது ஓவரில் வெற்றிபெறச் செய்தார்.
பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம், ஷாகீன் ஷா அஃப்ரிடி, முகம்மது ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் பலர் இத்தொடரில் விளையாடவில்லை. அவர்களுக்கு அவ்வணி நிர்வாகம் ஓய்வு கொடுத்துள்ளது.