ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஷார்ஜாவில் நடந்த இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று, தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.
முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 130 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. முதல் போட்டியைப் போலவே இரண்டாவது போட்டியிலும் ஆப்கானிஸ்தானின் ப ந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.
இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவரில் வெற்றிபெற்றது.
ரஹ்மானுல்லா குர்பாசும் இப்ராகிம் ஸத்ரானும் சிறப்பாகப் பந்தடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
மூன்றாவது, கடைசி போட்டி ஷார்ஜாவில் திங்கள்கிழமை (மார்ச் 27) நடக்கவுள்ளது.
பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம், ஷாகீன் ஷா அஃப்ரிடி, முகம்மது ரிஸ்வான் போன்ற முன்னணி வீரர்கள் பலர் இத்தொடரில் விளையாடவில்லை. அவர்களுக்கு அவ்வணி நிர்வாகம் ஓய்வு கொடுத்துள்ளது.