புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்றது.
இப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
டிசம்பர் 18ஆம் தேதியன்று டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.
இதை அடுத்து, ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின், அனைத்துலக கிரிக்கெட்டிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் (பிசிசிஐ) சக வீரர்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
38 வயது அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
டெஸ்ட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட்டுகளைச் சாய்த்த இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் அனில் கும்ப்ளே உள்ளார்.
அவர் 619 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
2010ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அஸ்வின் முதன்முறையாகக் களமிறங்கினார்.