மெல்பர்ன்: 2034 உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பைஅனைத்துலக காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) சவூதி அரேபியாவுக்கு வழங்கியதை ஆஸ்திரேலியாவின் தொழில்முறை காற்பந்து வீரர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
குறிப்பிடத்தக்க மனித உரிமை அபாயங்கள் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அதே நேரத்தில் அதன் தொடர்பில் தீங்கு ஏற்படுவதைத் தடுக்கும் திறன் ஃபிஃபாவிடம் உள்ளதாக என்று கேள்வி எழுப்பியுள்ளது.
2034ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பை ஃபிஃபா அதிகாரபூர்வமாக புதன்கிழமை (டிசம்பர் 11) சவூதி அரேபியாவுக்கு வழங்கியது.
ஆஸ்திரேலியாவின் தொழில்முறை காற்பந்து வீரர்கள் சங்கத்தின் தலைவர் பியூ புஷ் கூறுகையில், அனைத்துலக காற்பந்துச் சமூகம், இந்த முடிவுக்கு ஃபிஃபாவை பொறுப்பேற்க வைப்பது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
“இந்த போட்டியுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க மனித உரிமை தொடர்பான அபாயங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, ”என்று புஷ் வியாழக்கிழமை (டிசம்பர் 12) ராய்ட்டர்சுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அறிக்கையில் கூறினார்.
“உலகின் மிகவும் மதிப்புமிக்க காற்பந்து நிகழ்வை ஏற்று நடத்தும் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம், 2034 ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டியால் பாதிக்கப்பட்ட அனைவரின் உரிமைகளும் நிலைநிறுத்தப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் சவூதி அரேபியாவும் ஃபிஃபாவும் உறுதிப்படுத்த வேண்டும்.
“இருப்பினும், ஃபிஃபாவின் தற்போதைய நிர்வாகத் தோல்விகள் மற்றும் அதன் சொந்த மனித உரிமை கடமைகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் தன்மை இல்லாதது ஆகியவை தீங்கு விளைவிக்கும் அல்லது தடுக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை,” என்றும் திரு புஷ் தெரிவித்தார்.
இந்தக் கருத்துகளுக்கு சவூதி அரசாங்க தகவல் தொடர்பு அலுவலகமும் ஃபிஃபாவும் வியாழக்கிழமை உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சவூதி அரேபியா மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. மேலும் அதன் சட்டங்கள் மூலம் தனது தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதாக அது கூறுகிறது.

