கிரிக்கெட்: இந்தியா உடனான ஒருநாள் தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலியா

மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான ஆட்டத்திறனாலும் மிட்செல் மார்ஷின் அசத்தலான பந்தடிப்பாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) மாலை நடைபெற்ற இந்த ஆட்டம் வெறும் 37 ஓவர்களே நீடித்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் எட்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்தடிப்பாளர்களைத் திக்குமுக்காடச் செய்தார். 26 ஓவர்களிலேயே 117 ஓட்டங்களுடன் இந்திய அணி ஆட்டமிழந்தது.

அதையடுத்து பந்தடிக்கத் தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ஷும் டிராவிஸ் ஹெட்டும் கட்சிதமாக வேலையை முடித்தனர். மார்ஸ் 66 ஓட்டங்களைக் குவித்தும் ஹெட் 51 ஓட்டங்களை எடுத்தும் எளிதில் இலக்கை எட்டினர்.

பதினொரு ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை எட்டிவிட்டது.

மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 எனும் ஆட்டக் கணக்கில் சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் இறுதியாட்டம் புதன்கிழமை (மார்ச் 22) சென்னையில் நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!