சிங்கப்பூரின் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பரேரா இவ்வாண்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் பெண்கள் 200 மீட்டர் பிரிவு ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (ஜூலை 30) அரையிறுதிச் சுற்றில் மூன்றாவதாக முடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார் சாந்தி. காமன்வெல்த் விளையாட்டுகளின் வரலாற்றில் தனிநபர் பிரிவு ஒன்றில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள முதல் சிங்கப்பூர் வேக ஓட்ட வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

