ருதுராஜ் கெய்க்வாட் விலகல்; தமிழருக்கு வாய்ப்பு

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது அவர் தமது வலக்கை மோதிர விரலில் காயமடைந்ததே இதற்குக் காரணம்.

இந்நிலையில், அவருக்குப் பதிலாக உள்ளூர்ப் போட்டிகளில் மேற்கு வங்க மாநிலத்திற்காக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இப்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ‘ஏ’ அணியின் தலைவராக ஈஸ்வரன் இருந்து வருகிறார்.

இவருடைய தந்தையார் ஒரு தமிழர்; தாயார் பஞ்சாபி இனத்தைச் சேர்ந்தவர்.

வரும் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை செஞ்சுரியனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி கேப்டவுனில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும்.

இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் ரோகித் சர்மாவும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!