இளையர் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா

பெனோனி: தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதவிருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை (பிப்ரவரி 8) நடந்த பரபரப்பான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, ஐந்து பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை எடுத்து வெற்றியைச் சுவைத்தது.

முன்னதாக நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது.

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது இது ஒன்பதாம் முறை. ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

நடப்பு வெற்றியாளரான இந்தியா ஐந்து முறையும் ஆஸ்திரேலியா மூன்று முறையும் கிண்ணம் வென்றுள்ளன.

இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11) நடக்கவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!