மருத்துவரைப் பார்க்கவுள்ள டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் டோனி தமது கால் மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக எலும்பு மருத்துவரைப் பார்க்கவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. 

முட்டியில் காயமிருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் ஐபிஎல் தொடரில் டோனி விளையாடி அணியை வழிநடத்தினார்.

தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வர மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையின் மருத்துவரை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயத்திற்கு அறுவைசிகிச்சைதான் செய்ய வேண்டும் என்றால் அது குறித்த முடிவை டோனி தான் எடுப்பார் என்று காசி விஸ்வநாத் கூறினார்.

உடல் ஒத்துழைத்தால் அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவேன் என்று டோனி ஐபிஎல் கிண்ணத்தை வென்ற பிறகு கூறியிருந்தார்.

சென்னை அணி ஐந்தாவது முறையாக கிண்ணத்தை வென்றது. இருப்பினும் அந்த அணி எந்த கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. பொதுவாக சென்னை அணிக்கு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈர்ப்பு இல்லை என்று காசி விஸ்வநாத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!