அபுதாபி: அனைத்துலக டி20 கிரிக்கெட் போட்டிகளில் நூறு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்.
ஆசியக் கிண்ண டி20 தொடரில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) ஓமானுக்கு எதிரான போட்டியில் விநாயக் சுக்லாவை ஆட்டமிழக்கச் செய்ததன்மூலம் அவர் அந்த மைல்கல்லை எட்டினார். அனைத்துலக அளவில், அந்த மைல்கல்லைத் தொட்ட 25வது வீரர் அவர்.
அதே நேரத்தில், குறைந்த போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் அர்ஷ்தீப் நான்காம் இடத்தில் உள்ளார். இச்சாதனையை நிகழ்த்த இவருக்கு 64 ஆட்டங்களே தேவைப்பட்டன.
ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் (53 ஆட்டங்கள்), சந்தீப் லமிசானே (54 ஆட்டங்கள்), இலங்கையின் வனிந்து ஹசரங்கா (63 ஆட்டங்கள்) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.