சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவரான மகேந்திர சிங் டோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் என்று கடந்த சில வாரங்களாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
டோனி இந்தப் பருவத்துடன் கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து ஓய்வுபெறக்கூடும் என்பதால் அவரது ரசிகர்கள் சென்னை அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தையும் நேரடியாகப் பார்க்க விளையாட்டு அரங்குகளில் குவிந்து வருகின்றனர்.`
அண்மையில் கிரிக்கெட் வர்ணனையாளர் டேனி மோரிசன் விளையாட்டாக டோனியிடம், “இது உங்கள் கடைசி தொடர்” எப்படி உள்ளது என்று கேட்க, டோனியும் குறும்புத்தனமாக எனது முடிவை நீங்களே எடுத்துவிட்டீர்களா என்று கூற விளையாட்டு அரங்கமே கூச்சலில் நிறைந்தது.
இந்நிலையில், டோனி இம்முறை ஐபிஎல் கிண்ணத்தை வெல்ல முனைப்புடன் உள்ளதாகவும் கிண்ணத்தை வென்ற பிறகும் ஐபிஎல் தொடரில் ஓர் ஆண்டு விளையாட விருப்பம் இருப்பதாகவும் தம்மிடம் கூறியதாக அவரது நண்பரும் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் சென்னையின் வளர்ப்பு மகன் டோனி, அவர் தொடர்ந்து சென்னை அணிக்கு விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.