டோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் ? ரெய்னா கூறும் தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவரான மகேந்திர சிங் டோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் என்று கடந்த சில வாரங்களாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.

டோனி இந்தப் பருவத்துடன் கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து ஓய்வுபெறக்கூடும் என்பதால் அவரது ரசிகர்கள் சென்னை அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தையும் நேரடியாகப் பார்க்க விளையாட்டு அரங்குகளில் குவிந்து வருகின்றனர்.`

அண்மையில் கிரிக்கெட் வர்ணனையாளர் டேனி மோரிசன் விளையாட்டாக டோனியிடம், “இது உங்கள் கடைசி தொடர்” எப்படி உள்ளது என்று கேட்க, டோனியும் குறும்புத்தனமாக எனது முடிவை நீங்களே எடுத்துவிட்டீர்களா என்று கூற விளையாட்டு அரங்கமே கூச்சலில் நிறைந்தது.

இந்நிலையில், டோனி இம்முறை ஐபிஎல் கிண்ணத்தை வெல்ல முனைப்புடன் உள்ளதாகவும் கிண்ணத்தை வென்ற பிறகும் ஐபிஎல் தொடரில் ஓர் ஆண்டு விளையாட விருப்பம் இருப்பதாகவும் தம்மிடம் கூறியதாக அவரது நண்பரும் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரருமான சுரே‌ஷ் ரெய்னா  கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் சென்னையின் வளர்ப்பு மகன் டோனி, அவர் தொடர்ந்து சென்னை அணிக்கு விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!