சென்னை: ஆசிய வெற்றியாளர் கிண்ண ஹாக்கித் தொடரில் இந்திய அணி வாகை சூடியது.
சென்னையில் நடந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் கடும் போராட்டத்திற்குப்பின் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
ஆட்டத்தின் ஒன்பதாம் நிமிடத்தில் இந்திய அணி முதல் கோலைப் போட்டது.
ஆயினும், அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து மலேசிய அணி 3-1 என முன்னிலைக்குச் சென்றது. இருந்தபோதும், அதன்பின் இந்திய வீரர்கள் எழுச்சியுடன் விளையாடி சாதித்தனர்.
ஆசிய வெற்றியாளர் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றி இருப்பது இது நான்காவது முறை.