ஷுப்மன் கில்லுக்கு அபராதம்

சென்னை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் (S$19,400) அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) இரவு நடந்த போட்டியின்போது குஜராத் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதே அதற்குக் காரணம்.

இதன் காரணமாக சென்னை அணி பந்தடித்தபோது 20ஆவது ஓவரில் குஜராத் அணியில் ஐந்து வீரர்களுக்குப் பதிலாக நான்கு வீரர்களை மட்டுமே 30 யார்டு வட்டத்திற்கு வெளியே களக்காப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் குஜராத் அணி 63 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது. முதலில் பந்தடித்த சென்னை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை எடுத்தது. அதன்பின் பந்தடித்த குஜராத் அணி 30 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோற்றது.

முன்னதாக, குஜராத் அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை ஆறு ஓட்ட வித்தியாசத்தில் வென்றிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!