ஐபிஎல் இறுதியாட்டம் ஒத்திவைப்பு; ரயில் நிலையங்களில் உறங்கிய சென்னை ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்சுக்கும் குஜராத் டைட்டன்சுக்கும் இடையே நடக்க வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் மழை காரணமாக திங்கட்கிழமை (மே 29) இரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (மே 28) இரவு நடக்க வேண்டிய ஆட்டத்தைக் காண இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் விளையாட்டரங்கில் குவிந்தனர்.

இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

இந்திய நேரப்படி இரவு 11 மணி வாக்கில் இறுதியாட்டம் மே 29க்கு மாற்றப்படுவதாக ஆட்ட நடுவர்கள் அறிவித்தனர்.

ஆட்டம் மாற்றப்பட்டது மகிழ்ச்சி தந்தாலும் வேறு நகரங்களில் இருந்து வந்த ரசிகர்கள் அகமதாபாத்தில் கூடுதலாக ஒரு நாள் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

அதனால் சென்னை ரசிகர்கள் உட்பட பலர் அகமதாபாத் ரயில் நிலையங்களிலேயே உறங்கினர். அந்தப் படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

மே 29 அன்றும் மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் ரசிகர்கள் மழை வரக்கூடாது என்று வேண்டி வருவதாகக் கூறினர். 

இறுதியாட்டம் மழையால் பாதிக்கப்பட்டு நடக்காமல் போனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிண்ணம் வழங்கப்படும். புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் முடித்தது. சென்னை அணி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் வந்தது 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!