இந்தியப் பந்துவீச்சாளரை மட்டம் தட்டிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்

இஸ்லாமாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடிக்குப் பக்கத்தில்கூட வர முடியாது என்று ஒப்பிட்டுப் பேசி, மட்டம் தட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரரான அப்துல் ரசாக்.

பாகிஸ்தான் அணியின் தேர்வாளராகவும் இருக்கும் ரசாக், “பும்ராவைக் காட்டிலும் ஷகீன் அஃப்ரிடி எவ்வளவோ மேம்பட்டவர்,” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, 2019ஆம் ஆண்டிலும் பும்ராவை ‘பேபி பௌலர்’ எனக் குறிப்பிட்டிருந்தார் ரசாக்.

“கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன். ஆகையால், எனக்கு முன்னால் பும்ரா ஒரு ‘பேபி பௌலர்’தான். என்னால் அவரது பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு, ஓட்டம் குவிக்க முடியும்,” என்று ரசாக் அப்போது கூறியிருந்தார்.

இதனிடையே, அஃப்ரிடி, பும்ரா இருவருமே காயத்திலிருந்து தேறி வருகின்றனர். அடுத்த மாதம் 13ஆம் தேதி தொடங்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அஃப்‌ரிடி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாறாக, ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதலிரு போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா தேர்வுசெய்யப்படவில்லை. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!