சொந்த ஊரில் கிரிக்கெட் விளையாட்டரங்கம் திறக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டி.நடராஜன், தான் பிறந்த ஊரான தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் தமது சொந்த கிரிக்கெட் அரங்கத்தைத் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இம்மாதம் 23ஆம் தேதி இடம்பெறவுள்ள ‘நடராஜன் கிரிக்கெட் அரங்க’ திறப்புவிழாவின் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார் இன்னொரு இந்திய ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக்.

நடிகர் யோகிபாபு, தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் தெய்வ சிகாமணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன்  உள்ளிட்டோரும் கிரிக்கெட் அரங்க திறப்புவிழாவில் பங்கேற்கின்றனர்.

இதன்மூலம் தமது கனவு நனவாகியிருப்பதாக டுவிட்டர் வழியாக நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக இதுவரை ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள், நான்கு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் 32 வயதான நடராஜன். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!