மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி கண்டதைத் தொடர்ந்து, அணியின் தலைவி ஹர்மன்பிரீத் கோர் ரசிகர்களுக்கு உருக்கமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி கண்டது. ஒரு கட்டத்தில், இந்தியா 173 ஓட்ட இலக்கை நோக்கி வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டு இருந்தது. இதில் ஹர்மன்பிரீத் அரை சதம் அடைத்தார்.
எனினும், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் இவர் ஓட்டம் இழந்தது, இந்திய அணிக்குப் பேரிடியாக விழுந்தது.
அந்தத் தருணம், ஆஸ்திரேலியாவுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. ஆட்டத்தில் தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி, உலகக் கிண்ண இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு மௌனம் காத்து வந்த ஹர்மன்பிரீத், தம் ரசிகர்களுக்கு டுவிட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார்.
தம்முடைய கோடான கோடி ரசிகர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், இந்திய அணி தோல்வியைத் தழுவியிருப்பது அனைவருக்கும் சோகமாக இருக்கும் என்றார்.
மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள இந்தத் தோல்வியிலிருந்து தமது அணி நிச்சயம் மீண்டெழும் என்று ஹர்மன்பிரீத் உறுதிபடக் கூறினார்.
தாம் இறுதிவரை களத்தில் இருந்திருந்தால் இந்திய அணி அரையிறுதியில் வென்றிருக்கும் என்று ஆட்ட முடிவில் ஹர்மன்பிரீத் கூறியிருந்தார்.