‘வேறெந்த வீரராலும் இதைச் செய்ய முடியாது’: டோனியின் சாதனையைப் பாராட்டிய சேவாக்

இந்திய பிரிமியர் லீக்கில் (ஐபிஎல்) 5,000 ஓட்டங்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கில் திங்கட்கிழமை (ஏப்ரல் 3) நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி இந்த மைல்கல்லை எட்டினார்.

இந்த மைல்கல்லை எட்டிய ஏழாவது பந்தடிப்பாளர் டோனி என்ற போதிலும், கீழ் நடுவரிசையில் பந்தடித்துவரும் இவர், இந்த ஓட்ட எண்ணிக்கையை எட்டியிருப்பது மெச்சத்தக்கது.

இந்நிலையில், டோனியின் சாதனையை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் வெகுவாகப் பாராட்டியுள்ளார். நடுவரிசையில் விளையாடும் டோனியால் மட்டுமே இத்தனை ஓட்டங்களை எடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

டோனி மைல்கற்களைத் துரத்துவதில்லை எனச் சொன்ன சேவாக், ஐபிஎல்லில் 5,000 ஓட்ட மைல்கல்லை எட்டியிருப்பது, டோனிக்கு எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!