பிரான்சைவிட சவூதிமேல் என்கிறார் ரொனால்டோ

துபாய்: பிரெஞ்சுக் காற்பந்து லீக் போட்டிகளைக் காட்டிலும் சவூதி புரோ லீக் போட்டித்தன்மைமிக்கது என்று உலகின் முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

“உண்மையாகச் சொல்வதெனில், பிரெஞ்சு லீக் அளவிற்கு சவூதி லீக் மோசமில்லை. அது போட்டித்தன்மைமிக்கது என நினைக்கிறேன்,” என்றார் ஐந்து முறை உலகின் சிறந்த காற்பந்து வீரர் விருதை வென்ற ரொனால்டோ.

கடந்த ஓராண்டாக சவூதியில் விளையாடி வருவதன் அடிப்படையிலேயே தாம் இதனைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

துபாயில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) நடந்த காற்பந்து விருது விழாவின்போது ரொனால்டோ இவ்வாறு சொன்னார்.

முதன்முதலில் சவூதி லீக்கிற்கு இடமாறிய முன்னணி ஆட்டக்காரர் ரொனால்டோதான். கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் அல் நசர் குழுவுடன் அவர் இணைந்தார்.

அவரைத் தொடர்ந்து, பிரான்சின் கரிம் பென்சிமா, பிரேசிலின் நெய்மார், செனகல் நாட்டின் சாடியோ மனே உள்ளிட்ட முன்னணி வீரர்களும் ஐரோப்பியக் குழுக்களை விட்டு சவூதி லீக்கிற்கு மாறினர்.

சவூதி லீக்கில் விளையாட அதிகமான பணம் வழங்கப்படுவதே இதற்கு முதன்மைக் காரணமெனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!