சவூதியில் ரொனால்டோவிற்கு முதல் கிண்ணம்

ரியாத்: சவூதி அரேபியாவின் அல் நசர் குழு சார்பில் தமது முதல் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளார் உலகின் முன்னணிக் காற்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.

கடந்த ஆண்டு சாதனைத் தொகைக்கு அக்குழுவில் சேர்ந்தார் 38 வயதான ரொனால்டோ. அவரது வழியில் இப்போது முன்னணி ஆட்டக்காரர்கள் பலரும் அரபுக் குழுக்களில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், சவூதியின் டாயிஃப் நகரில் சனிக்கிழமை நடந்த வெற்றியாளர் கிண்ண (சாம்பியன்ஸ் கப்) இறுதி ஆட்டத்தில் ரொனால்டோவின் அல் நசர் குழு 2-1 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் குழுவை வென்று வாகை சூடியது.

கூடுதல் நேரம்வரை சென்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் சார்பில் விழுந்த இரு கோல்களையும் ரொனால்டோதான் அடித்தார்.

இந்தத் தொடரில் மொத்தம் ஆறு கோல்களைப் போட்டு, அதிக கோலடித்தோர் பட்டியலிலும் இவரே முதலிடம் பிடித்தார்.

சவூதி, கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஈராக், மொரோக்கோ, துனிசியா, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளின் முன்னணிக் குழுக்கள் இப்போட்டியில் பங்கெடுத்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!