வான்கடே விளையாட்டரங்கில் சிக்சர் மழை

ஐபிஎல் என்னும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளுக்கு நாள் பந்தடிப்பாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

வெள்ளிக்கிழமை (மே 12)  இரவு நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

ஆட்டம் மும்பையின் வான்கடே விளையாட்டரங்கில் நடந்தது.

முதலில் பந்தடித்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில்  5 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் குவித்தது.

சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ஓட்டங்கள் குவித்தார். திடலின் எல்லா பக்கங்களிலும் ஓட்டத்தை குவித்த அவர் 11 நான்கு ஓட்டங்களையும் 6 சிக்சர்களையும் விளாசினார். 

ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தையும் சூர்யகுமார் நேற்று பதிவுசெய்தார்.

இமாலய இலக்கை விரட்டிய குஜராத் அணிக்குத் தொடக்கம் முதலே சரிவு தான். 7.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 55 ஓட்டங்களே அது எடுத்திருந்தது. 

அந்த அணி 12 ஓவர் முடிவில் 100 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய ர‌ஷித் கான், 32 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார். 10 சிக்சர்கள் அடித்து அரங்கத்தை அதிரவைத்தார் அவர்.

இன்னும் சில பந்துகள் இருந்திருந்தால் ர‌ஷித் கான் குஜராத்தை வெற்றிக்கு அழைத்து சென்றிருப்பார். 

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்து 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!