ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குச் சிங்கப்பூர் குழு தகுதி பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங்காங்கை 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோற்கடித்தது.
இதன்மூலம் 2027ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குச் சிங்கப்பூர் தகுதி பெற்றது.
இந்நிலையில், வரலாறு படைத்த சிங்கப்பூர் குழுவுக்கு ஏறத்தாழ $2 மில்லியன் வழங்குதொகை அளிக்கப்படும் என்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைவர் ஃபாரஸ்ட் லீ அறிவித்துள்ளார்.
வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பிய சிங்கப்பூர் ஆட்டக்காரர்களை வரவேற்க அவர்களது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2ல் புதன்கிழமையன்று (நவம்பர் 19) கூடினர்.

