பார்சிலோனா: பாலியல் குற்றத்திற்காக நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரேசில் காற்பந்து வீரர் டேனி ஆல்வெஸ் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆல்வெஸ் கிட்டத்தட்ட கால்வாசி தண்டனையை அனுபவித்துவிட்ட நிலையில், ஒரு மில்லியன் யூரோ (S$1.08 மில்லியன்) பிணைத்தொகையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரேசில், ஸ்பெயின் என இருநாட்டுக் கடப்பிதழ்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்பெயினைவிட்டு அவர் வெளியேறவும் கூடாது; வாரந்தோறும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணை ஆல்வெஸ் அணுகவும் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.