மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் ப்ரீ கோல்டு பேட் மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்-துள்ளார். ஸ்காட் லாந்து வீராங்கனை கிரிஸ்டி கில்மருடனான இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 21-15, 21-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் 5வது கிராண்ட் ப்ரீ பட்டம் வென்றுள்ளார் சிந்து. பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் இதே கிரிஸ்டி கில்மருக்கு எதிரான போட்டியில் சிந்து தோல்வியடைந்தார், ஆனால் இம்முறை அவரை எழும்ப விடாமல் 32 நிமிடங்களில் அடித்து நொறுக் கினார் சிந்து. தொடக்க ஆட்டத்தில் முதலில் 5-2 என்றும் பிறகு 12-6 என்றும் பிறகு 18-10 என்றும் சிந்து முன்னிலை வகித் தார். ஆனால் கில்மர் 4 புள்ளிகளை அடுத்தடுத்து வென்றார். ஆனால் செட்டை வெல்லும் அளவுக்கு அச்சுறுத்தவில்லை.
மலேசியா மாஸ்டர்ஸ்: பட்டம் வென்ற பி.வி.சிந்து
1 mins read
-

