ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்ற சிங்கப்பூர் பாய்மரப் படகோட்ட வீரர்கள்

ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்ற சிங்கப்பூர் பாய்மரப் படகோட்ட வீரர்கள்

1 mins read
ce68eb95-3913-4ff6-8e41-ac9c59d07deb
-

ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குச் சிங்கப்பூரைச் சேர்ந்த பாய்மரப் படகோட்ட வீரர்கள் நால்வர் தகுதி பெற்றுள்ளனர். ஸ்பெயினில் நடைபெற்ற பாய்மரப் படகோட்டப் போட்டிக்கான பெண்கள் பிரிவில் கிரிசெல்டா கெங்கும் சாரா டானும் (படம்) 11வது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் வாய்ப்பைத் தட்டிச் சென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சிங்கப்பூரின் ஜஸ்டின் லியூவும் டெனிஸ் லிம்மும் 20வது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றனர். இவர்கள் நால்வரையும் சேர்த்து ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக்குக்கு முன்பு இல்லாத அளவுக்கு பாய்மரப் படகோட்ட வீரர்கள் ஒன்பது பேரைச் சிங்கப்பூர் அனுப்புகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்