மும்பை: கிரிக்கெட் வர்ணனையின் மூலம் புகழ் பெற்றவர் ஹர்ஷா போக்ளே. ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆண்டு முதலே அவர் வர்ணனையாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஹர்ஷா போக்ளேவின்ஐ.பி.எல். வர்ணனையாளர் ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஹர்ஷா போக்ளே நீக்கத் துக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் வாரியமோ, ஐ.பி.எல். அமைப்போ இதுவரை தெரிவிக்கவில்லை. ஹர்ஷா நீக்கத்துக்கு இரண்டு காரணங்கள் இருப்ப தாகத் தகவல்கள் கசிந்து இருக்கின்றன. 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்ளா தேஷுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஓர் ஓட்ட வித்தி யாசத்தில் போராடி வென்றது.
வர்ணனையாளர் குழுவிலிருந்து ஹர்ஷா நீக்கப்பட்டதால் சர்ச்சை
1 mins read
-

