புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த சீருடற்பயிற்சி வீராங்கனை தீபா கர்மாகர் பிரேசிலில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் சீருடற்பயிற்சி போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ரியோ டி ஜெனி ரோ நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் நான்காவது இடம் பிடித்ததை அடுத்து அவர் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளார். 22 வயது நிரம்பிய தீபா கர்மாகர், 52 ஆண்டு களுக்குப் பிறகு சீருடற்பயிற்சி பிரிவில் இந்தியாவை மீண்டும் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெறச் செய்துள்ளார். இதுவரை ஒலிம் பிக் சீருடற்பயிற்சி போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்து 11 ஆண்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் சீருடற்பயிற்சி: தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை
1 mins read
-

