புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக நாடு திரும்புகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கடந்த ஞாயிறன்று நடந்த லீக் ஆட்டத்தின்போது அவர் காயம் அடைந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய 5வது ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் என்பது குறிப்பிடத்தக்கது. முன்ன தாக ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் மார்ஷ், ஜான் ஹேஸ்டிங்ஸ், ஷான் மார்ஷ் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பும் மேக்ஸ்வெல்
1 mins read

