சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் இடைக்காலத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக வி. சுந்தரமூர்த்தியை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை 4.30 மணிக்கு ஜாலான் புசார் விளையாட்டரங்கில் செய்தியாளர் கூட்டத்தில் இந்த அறிவிப்பு செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. ஓராண்டு ஒப்பந்தத்துக்கு சுந்தரம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லயன்சின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக சுந்தரம்
1 mins read
-

