காற்பந்து போட்டிகள் வரும் பின்னே ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் வரும் முன்னே என்பது கிட்டத்தட்ட பழமொழியாகிவிட்டது. பிரான்சில் நேற்று யூரோ கிண்ண 2016 காற்பந்து போட்டிகள் தொடங்கின. ஆனால், அதற்கு முன்னதாகவே வியாழக்கிழமையன்று வழக்கம்போல் இங்கிலாந்து ரசிகர்கள் பிரான்சின் துறைமுக நகரான மார்சேவில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிட்டனர். அங்கு மதுக்கூடத்துக்கு வெளியே கூடிய சுமார் 250 இங்கிலாந்து ரசிகர்கள் குளிர்பானத் தகர டாப்பாக்களை போலிசார் மீது வீசியெறிந்து தங்கள் கைவரிசையைக் காட்டினர். படம்: ஏஎஃப்பி
ஆர்ப்பாட்டத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
1 mins read
-

