ஹராரே: இந்தியா=ஸிம்பாப்வே அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டியைக் 3=0 என இந்தியா கைப்பற்றியது. பூவா தலையா வென்று முதலில் பந்தடிக்கத் தொடங்கிய ஸிம்பாப்வே 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் சிபந்தா(38), சிபபா(27) ஓட்டங்கள் எடுத்த னர். இந்திய அணி தரப்பில் பும்ரா 22 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டு களைச் சாய்த்தார். இதையடுத்து 124 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. சாகல், அறிமுக வீரர் பஸல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முத லில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 10 ஓவர்களில் 43 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்ந்து நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சராசரி ஓட்ட விகிதத்தின்படி ஸிம்பாப்வேயின் இரண்டாவது மோசமான ஆட்டமாக இது அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. 63 ஓட்டங்கள் எடுத்த ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட ராகுல் 196 ஓட்டங்கள் குவித்த ராகுல் தொடர் நாயகன் விருதும் பெற்றார். இந்தத் தொடரில் பும்ரா அதிகபட்சமாக 9 விக்கெட்டுக்களைச் சாய்த்துள்ளார். தனது அறிமுக போட்டியில் பாஸல் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்கள் எடுத்து அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஆலன் பார்டர் சாதனையைத் டோனி சமன் செய்துள்ளார். இதுவரை 107 ஒருநாள் போட்டிகளில் டோனி வெற்றியைத் தந்துள்ளார்.
ராகுல் 2 சிக்சர் 4 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்களும் பஸல் 55 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். படம்: ஏஎஃப்பி

