போராடி சாதனை; 2வது முறையாக தங்கம்

போராடி சாதனை; 2வது முறையாக தங்கம்

1 mins read
6b76213e-6f0e-4e2f-aa77-682c3f5ccbe0
-

ஒலிம்­பிக் வர­லாற்­றில் முதல் முறையாக தொடர்ந்து இரண்டா­வது தடவை­யாக டென்னிஸ் ஒற்றை­யர் பிரிவில் தங்கப் பதக்­கம் வென்று சாதனை படைத்­துள்­ளார் எண்டி மரே. நேற்று முன் ­தி­னம் ரியோவில் நடை­பெற்ற டென்னிஸ் ஒற்றை­யர் பிரிவுப் போட்­டி­யில் அர்­ஜென்­டினா­வின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை 7-5, 4-6, 6-2, 7-5 என்ற கணக்­கு­களில் தோற்­க­டித்­தார். 2012ஆம் ஆண்­டி­லும் டென்னிஸ் ஒற்றை­யர் பிரிவில் மரே தங்கம் வென்றார். இவ்­வாண்டு போட்­டி­களில் ஜோகோவிச், நடாலை வெளி­யேற்­றிய டெல் போட்­ரா­வுக்கு வெள்ளிப் பதக்­கம் கிடைத்­தது. விறு­வி­றுப்­பான இறுதிப் போட்டி நான்கு மணி நேரத்­துக்கு நீடித்­தது. லண்ட­னில் நடை­பெற்ற கடந்த ஒலிம்­பிக் போட்­டி­யில் வெண்­க­லப் பதக்­கம் வென்ற டெல் பொட்ரோ, ரியோவில் நேற்று முன்­தி­னம் மரேயை மோதிய இறுதி ஆட்­டத்­தில் தோல்­வி­கண்டதை அடுத்து கண்ணீர் சிந்­தினார். கடந்த 3 ஆண்டுகளில் டெல் போட்ரோவின் கைகளில் 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டதைக் குறிப்பிட்ட மரே, அவரது முயற்சியைப் பெரிதும் பாராட்டினார்.

வெற்றிக் களிப்பில் எண்டி மரே. படம்: ஏஎஃப்பி